அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

நன்றியற்ற ஈரான் தலைவர்! டிரம்ப் குற்றச்சாட்டு!

அமெரிக்காவை விமர்சித்த ஈரான் தலைமை மதகுரு கமேனியை டொனால்ட் டிரம்ப் நன்றியற்றவர் என்று விமர்சனம்

News image
Updated On :28 ஜூன் 2025, 2:56 am

DIN

அமெரிக்காவை விமர்சித்த ஈரான் தலைமை மதகுருவை டொனால்ட் டிரம்ப் நன்றியற்றவர் என்று விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவின் நெற்றிப் பொட்டில் ஈரான் அறைந்ததாக ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனியின் பேசியதற்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எதிர்க்கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் டிரம்ப் பேசுகையில் ``ஈரான் மதகுரு கமேனியை படுகொலையில் இருந்து காப்பாற்றியுள்ளேன். ஆனால், அவர் அதற்கான நன்றி இல்லாமல் இருக்கிறார். அணு ஆயுதங்களை தயாரிக்க முயன்றால், ஈரானில் குண்டுகள் வீசவும் உத்தரவிடுவேன்.

கமேனி, எங்கு தங்க வைக்கப்பட்டுள்ளார் என்பதுகூட எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால், கமேனியின் வாழ்க்கையை முடிக்க இஸ்ரேல் அல்லது அமெரிக்க ஆயுதப் படைகளை அனுமதிக்க மாட்டேன்’’ என்று தெரிவித்தார்.

மேலும், கமேனி குறித்த டிரம்ப்பின் கருத்தை திரும்பப் பெற வேண்டும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கேட்டுக் கொண்டார்.

இதுகுறித்து, அப்பாஸ் கூறுகையில், ஓர் ஒப்பந்தத்தை (அணுசக்தி ஆயுத ஒப்பந்தம்) அவர் (டிரம்ப்) உண்மையாக விரும்பினால், ஈரான் மதகுரு கமேனிக்கு எதிராக அவமரியாதையான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத பேச்சை ஒதுக்கி வைக்க வேண்டும். அவரின் லட்சக்கணக்கான ஆதரவாளர்களைக் காயப்படுத்துவதையும் நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து, கத்தாரில் உள்ள அமெரிக்காவின் ராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இருப்பினும், இதனுடன் போரை முடிவுக்கு கொண்டு வந்துவிடலாம் என்ற முடிவு செய்யப்பட்டது.

ஆனால், வியாழக்கிழமையில் ஈரான் நாட்டு மக்களிடையே அந்நாட்டு தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உரையாற்றுகையில், அமெரிக்காவின் ராணுவத் தளங்கள் மீது, எந்த உயிர்ச் சேதமும் இன்றி தாக்குதல் நடத்தியதன் மூலம் அமெரிக்காவின் நெற்றிப் பொட்டில் ஈரான் அறைந்துள்ளது. இஸ்ரேல் அழிந்து விடும் என்பதால்தான், போரில் அமெரிக்காவும் ஈடுபட்டது என்று சூளுரைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.