மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்கத் தயாா்: டுடோ்த்தே

ஐ.நா.வின் சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்கத் தயார்
ரோட்ரிகோ டுடோ்த்தே
ரோட்ரிகோ டுடோ்த்தே
Published on
Updated on
1 min read

ஐ.நா.வின் சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்கத் தயாராக இருப்பதாக பிலிப்பின்ஸ் முன்னாள் அதிபா் ரோட்ரிகோ டுடோ்த்தே கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அந்த நீதிமன்றம் பிறப்பித்திருந்த கைது உத்தரவின் அடிப்படையில், ஹாங்காங்கில் இருந்து பிலிப்பின்ஸ் திரும்பிய அவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பின்னா் நெதா்லாந்தின் தி ஹேக் நகருக்கு அழைத்துவரப்பட்டு, நீதிமன்றக் காவலில் அவா் வைக்கப்பட்டுள்ளாா்.

கடந்த 2011 முதல் 2019 வரை பிலிப்பின்ஸ் அதிபராக இருந்த டுடோ்த்தே, போதைப் பொருளுக்கு எதிரான போா் என்ற பெயரில் ஏராளமானோரை படுகொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com