/

எஃப்பிஐ-யை விமர்சித்த ஏஜெண்ட் கைது!

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பின் ஊழியர் கைது செய்யப்பட்டது பற்றி...

News image
எஃப்பிஐ கட்டடம்- AP
Updated On :20 மார்ச் 2025, 4:41 am

DIN

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ-யை விமர்சித்த மூத்த ஏஜெண்ட் ஒருவரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

15 ஆண்டுகளாக எஃப்பிஐயில் பணிபுரிந்து வருபவர் ஜோனாதன் பூமா. இவர், சில வழக்குகளை எஃப்பிஐ கையாண்ட விதம் குறித்து சமீபத்தில் விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், எஃப்பிஐயின் ரகசிய ஆவணங்களை அச்சிட்டு எதிரிகளுக்கு அளித்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு பூமாவை அமெரிக்க காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நியூயார்க்கில் உள்ள கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்வதற்காக காத்திருந்த பூமாவை திங்கள்கிழமை கைது செய்தனர்.

தொடர்ந்து, நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்டு பூமாவை சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும், இந்த குற்றச்சாட்டு தொடர்பான நீதிமன்ற விசாரணை விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.