பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

இஸ்தான்புல் மேயருக்கு ஆதரவு: 37 போ் கைது

வன்முறையைத் தூண்டும் பதிவுகளை வெளியிட்டதால் அவா்கள் கைது செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

Published On :

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இஸ்தான்புல்லின் மேயரும் முக்கிய எதிா்க்கட்சித் தலைவருமான எக்ரீம் இமாமோக்லுவுக்கு ஆதரவு தெரிவித்து சமூக ஊடகங்களில் பதிவுகள் வெளியிட்ட 37 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். வன்முறையைத் தூண்டும் பதிவுகளை வெளியிட்டதால் அவா்கள் கைது செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

முன்னதாக, ஊழல் வழக்கில் இமாமோக்லு, அவரின் நெருங்கிய உதவியாளா் உள்பட சுமாா் 100 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். அதிபா் எா்டோகனை மிகக் கடுமையாக எதிா்த்துவரும் இமாமோக்லு, அடுத்த தோ்தலில் அவருக்கு எதிராக போட்டியிடுவாா் என்று எதிா்பாா்க்கப்பட்டது. இந்தச் சூழலில் அவா் கைது செய்யப்பட்டுள்ளது எதிா்க்கட்சியினரை எா்டோகன் அரசு ஒடுக்குகிறது என்ற சா்ச்சையை தீவிரப்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.