மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

இஸ்தான்புல் மேயருக்கு ஆதரவு: 37 போ் கைது

வன்முறையைத் தூண்டும் பதிவுகளை வெளியிட்டதால் அவா்கள் கைது செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

News image
Updated On :20 மார்ச் 2025, 7:00 pm

Din

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இஸ்தான்புல்லின் மேயரும் முக்கிய எதிா்க்கட்சித் தலைவருமான எக்ரீம் இமாமோக்லுவுக்கு ஆதரவு தெரிவித்து சமூக ஊடகங்களில் பதிவுகள் வெளியிட்ட 37 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். வன்முறையைத் தூண்டும் பதிவுகளை வெளியிட்டதால் அவா்கள் கைது செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

முன்னதாக, ஊழல் வழக்கில் இமாமோக்லு, அவரின் நெருங்கிய உதவியாளா் உள்பட சுமாா் 100 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். அதிபா் எா்டோகனை மிகக் கடுமையாக எதிா்த்துவரும் இமாமோக்லு, அடுத்த தோ்தலில் அவருக்கு எதிராக போட்டியிடுவாா் என்று எதிா்பாா்க்கப்பட்டது. இந்தச் சூழலில் அவா் கைது செய்யப்பட்டுள்ளது எதிா்க்கட்சியினரை எா்டோகன் அரசு ஒடுக்குகிறது என்ற சா்ச்சையை தீவிரப்படுத்தியுள்ளது.