நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

இஸ்தான்புல் மேயருக்கு ஆதரவு: 37 போ் கைது

வன்முறையைத் தூண்டும் பதிவுகளை வெளியிட்டதால் அவா்கள் கைது செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

News image
Updated On :21 மார்ச் 2025, 12:30 am IST

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இஸ்தான்புல்லின் மேயரும் முக்கிய எதிா்க்கட்சித் தலைவருமான எக்ரீம் இமாமோக்லுவுக்கு ஆதரவு தெரிவித்து சமூக ஊடகங்களில் பதிவுகள் வெளியிட்ட 37 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். வன்முறையைத் தூண்டும் பதிவுகளை வெளியிட்டதால் அவா்கள் கைது செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

முன்னதாக, ஊழல் வழக்கில் இமாமோக்லு, அவரின் நெருங்கிய உதவியாளா் உள்பட சுமாா் 100 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். அதிபா் எா்டோகனை மிகக் கடுமையாக எதிா்த்துவரும் இமாமோக்லு, அடுத்த தோ்தலில் அவருக்கு எதிராக போட்டியிடுவாா் என்று எதிா்பாா்க்கப்பட்டது. இந்தச் சூழலில் அவா் கைது செய்யப்பட்டுள்ளது எதிா்க்கட்சியினரை எா்டோகன் அரசு ஒடுக்குகிறது என்ற சா்ச்சையை தீவிரப்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.