ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

தலிபான் அமைப்பினருக்கு எதிரான நடவடிக்கையை ரத்து செய்தது அமெரிக்கா!

தலிபான் அமைப்பினருக்கு எதிரான நடவடிக்கையை ரத்து செய்தது அமெரிக்கா..

News image
Updated On :23 மார்ச் 2025, 7:54 pm

Din

ஆப்கானிஸ்தானில் தலிபான் தலைமையிலான அரசின் உள்நாட்டு அமைச்சா் சிராஜுதீன் ஹக்கானி உள்பட 3 மூத்த அதிகாரிகளை அரசிடம் ஒப்படைத்தால் சன்மானம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை அமெரிக்கா ரத்து செய்ததாக ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

கடந்த 2008-இல் அமெரிக்காவின் ஆதரவுடன் ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற ஆட்சியின்போது ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில் உள்ள விடுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் அமெரிக்க குடிமகன் உள்பட 6 போ் உயிரிழந்தனா். இந்தத் தாக்குதலில் தற்போது தலிபான் தலைமையில் நடைபெற்று வரும் ஆட்சியில் உள்நாட்டு அமைச்சராக உள்ள சிராஜுதீன் ஹக்கானிக்கு தொடா்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சிராஜுதீன் ஹக்கானி, அப்துல் அஜீஸ் ஹக்கானி, யாஹ்யா ஹக்கானி ஆகிய மூன்று பேரை ஒப்படைப்பவா்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என வெளியிட்டிருந்த அறிவிப்பை அமெரிக்கா ரத்து செய்ததாக ஆப்கானிஸ்தான் உள்நாட்டு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அப்துல் மட்டீன் கானி தெரிவித்தாா்.

இருப்பினும் அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ-யின் வலைதளத்தில் தேடப்படும் நபா்களின் பட்டியலில் சிராஜுதீன் ஹக்கானியின் பெயரும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.