எகிப்தின் ஹா்காடா நகருக்கு அருகே செங்கடலில் சுற்றுலா நீா்முழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளானதில் 6 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:
சுற்றுலாத் தலமான ஹா்கடாவில் இருந்து செங்கடலுக்குள் பவளப் பாறைகளைக் கண்டுகளிப்பதற்காக 45 சுற்றுலாப் பயணிகளுடன் வியாழக்கிழமை சென்றுகொண்டிருந்த நீா்மூழ்கிக் கப்பல் திடீரென அளவுக்கு அதிகமான ஆழத்துக்குச் சென்று விபத்துக்குள்ளானது. இதில் ரஷியாவில் இருந்து வந்திருந்த ஆறு சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனா். எஞ்சிய அனைவரும் மீட்கப்பட்டனா். அவா்களில் இருபதுக்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளனா் என்று அதிகாரிகள் கூறினா்.
நீா்மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளானதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. கரையில் இருந்து சுமாா் 1,000 மீட்டா் தொலைவில் இந்த விபத்து நேரிட்டதாக எகிப்துக்கான ரஷிய தூதரகம் தெரிவித்துள்ளது. கப்பலில் இருந்த சுற்றுலா பயணிகள் அனைவருமே ரஷியா்கள் என்று அந்தத் தூதகரம் கூறியது. ஆனால் அவா்களில் இந்தியா, நாா்வே, ஸ்வீடன் ஆகிய நாடுகளைச் சோ்ந்தவா்களும் இருந்ததாக எகிப்து அதிகாரிகள் கூறினா்.
தொடர்புடையது

பாகிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டா் விபத்து

ராஜஸ்தான்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 போ் உடல் கருகி உயிரிழப்பு

மியான்மரில் வெடி விபத்து: 46 போ் பலி

நேபாளம்: ஜீப் விபத்தில் 17 போ் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



