மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 1,644 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
மியான்மர், தாய்லாந்து நாடுகளில் நேற்று (28.03.25) பிற்பகல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் இரு நாடுகளிலும் பாதிப்புகள் மிகவும் மோசமடைந்துள்ளன.
புள்ளிவிவரங்களின் படி, சகாய்ங் நகரின் வடமேற்கே 16 கி.மீ, தொலைவில் 11.50 மணியளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.7 அலகுகளாகப் பதிவானது. தொடர்ந்து, இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டு ரிக்டரில் 6.4 புள்ளியாகப் பதிவானது.
மியான்மர் நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான பேரழிவாக இது பார்க்கப்படுகிறது. மின்கம்பங்கள் சாய்ந்து மின்வசதி தடைபட்ட பல இடங்களில் மீட்புப் பணியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த இரு நிலநடுக்கங்களால் மியான்மரின் அண்டை நாடான தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளிலும் பல அடுக்குமாடி கட்டடங்கள் சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
மியான்மரில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1,644 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 3,408் காயமடைந்ததாகவும் 139 பேர் காணாமல் போனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல, தாய்லாந்தில் இதுவரை 10 பேர் பலியானதாகவும் 26 பேர் காயமடைந்ததாகவும் 40-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிலநடுக்கத்தால் கட்டடங்கள் சரிந்ததால் அவற்றின் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இரு நாடுகளிலும் பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெனிசுவேலா நிலநடுக்கம்: 3,500-ஐ கடந்த பலி எண்ணிக்கை!

திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!
700-க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற மியான்மர் ராணுவம்!

மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.9 ஆகப் பதிவு
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



