ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

இஸ்ரேலுடன் போர் நிறுத்தத்துக்குத் தயார்: பிணைக்கைதிகள் விடுவிப்பு - ஹமாஸ்

வாரந்தோறும் இஸ்ரேலியப் பிணைக்கைதிகள் 5 பேர் வீதம் விடுவிக்கப்படுவர்...

News image

AP

Updated On :30 மார்ச் 2025, 2:31 am

DIN

கெய்ரோ: இஸ்ரேலுடன் போர் நிறுத்தத்துக்குத் தயார்; பிணைக்கைதிகளை விடுவிக்கிறோம் என்று ஹமாஸ் தரப்பிலிருந்து சனிக்கிழமை(மார்ச் 29) தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்க இருதரப்புக்குமிடையே மத்தியஸ்தம் செய்துவரும் எகிப்து, முன்மொழிந்துள்ள புதியதொரு போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பினர் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதன்படி, வாரந்தோறும் இஸ்ரேலியப் பிணைக்கைதிகள் 5 பேர் வீதம் விடுவிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் தரப்பு ஏற்றுக்கொண்டு காஸாவில் தாக்குதலை நிறுத்துமா என்பது குறித்து இன்னும் தெளிவுபடுத்தவில்லை. இதுகுறித்த விரிவான தகவல் இன்னும் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.