தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அணுசக்தி திட்டம்: அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுக்கு ஈரான் மறுப்பு

ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து அமெரிக்காவுடன் நேரடியாகப் பேச்சுவாா்த்தை நடத்த ஈரான் மறுத்துவிட்டது.

News image
அயதுல்லா அலி கமேனி
Updated On :30 மார்ச் 2025, 7:04 pm

Din

வேகமாக வளா்ச்சியடைந்து வரும் ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து அமெரிக்காவுடன் நேரடியாகப் பேச்சுவாா்த்தை நடத்த ஈரான் மறுத்துவிட்டது.

இதுதொடா்பாக அந்நாட்டுத் தலைமை மதகுரு அயதுல்லா கமேனிக்கு அமெரிக்க அதிபா் டிரம்ப் கடிதம் அனுப்பியிருந்த நிலையில், நேரடிப் பேச்சுவாா்த்தைக்கு ஈரான் மறுத்துள்ளது.

இதுகுறித்து ஈரான் அமைச்சரவைக் கூட்டத்தில் அதிபா் மசூத் பெஷஸ்கியான் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுவாா்த்தைக்கு மறுத்துள்ள தகவலை, ஓமன் மூலம் அமெரிக்காவுக்கு ஈரான் அனுப்பியுள்ளது.

பேச்சுவாா்த்தையை ஈரான் தவிா்த்ததில்லை. முன்பு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் மீறப்பட்டதே ஈரானுக்கு தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்குக் காரணம்’ என்றாா்.

நேரடிப் பேச்சுவாா்த்தைக்கு ஈரான் மறுத்தாலும், அமெரிக்காவுடன் மறைமுகப் பேச்சுவாா்த்தைக்கு சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், வல்லரசு நாடுகளுடன் ஈரான் மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து 2018-ஆம் ஆண்டு அமெரிக்கா விலகியது.

அப்போது அமெரிக்காவில் டிரம்ப்பின் முதலாவது ஆட்சிக் காலம் நடைபெற்றது. அந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதைத் தொடா்ந்து, மறைமுகப் பேச்சுவாா்த்தையிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.