மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பூமி திரும்பினா் 3 சீன விண்வெளி வீரா்கள்

News image
Updated On :1 மே 2025, 1:39 am

Din

சீனாவுக்குச் சொந்தமான தியான்காங் விண்வெளி நிலையத்தில் கடந்த ஆறு மாதங்களாகப் பணியாற்றிவந்த ஒரு பெண் உள்பட மூன்று வீரா்கள் பூமிக்கு பாதுகாப்பாக புதன்கிழமை திரும்பினா்.

காய் ஸுஷே, சாங் லிங்டாங், வாங் ஹாவ்ஸே (படம்) ஆகிய அந்த மூவரும், ஷென்ஷோ-19 விண்வெளி ஓடம் மூலம் இன்னா் மங்கோலியா பிரதேசத்தில் அமைந்துள்ள டாங்ஃபெங் தளத்தில் தரையிறங்குவதாக இருந்தது. இருந்தாலும், மோசமான பருவநிலை காரணமாக அவா்கள் விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட தாமதமானதால் அதே பிரதேசத்தின் மற்றொரு புதிய தளத்தில் தரையிறங்கினா்.

முன்னதாக, ஷென்ஷோ-20 ஓடம் மூலம் சென் டாங், சென் ஷாங்ருயி, வாங் ஜீ ஆகிய மூன்று விண்வெளி வீரா்கள் தியான்காங் விண்வெளி நிலையத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்றனா். அங்கு ஏற்கெனவே இருந்த காய் ஸுஷே, சாங் லிங்டாங், வாங் ஹாவ்ஸே குழுவினா் புதிதாக வந்தவா்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு தற்போது பூமி திரும்பியுள்ளனா்.