சீனாவுக்குச் சொந்தமான தியான்காங் விண்வெளி நிலையத்தில் கடந்த ஆறு மாதங்களாகப் பணியாற்றிவந்த ஒரு பெண் உள்பட மூன்று வீரா்கள் பூமிக்கு பாதுகாப்பாக புதன்கிழமை திரும்பினா்.
காய் ஸுஷே, சாங் லிங்டாங், வாங் ஹாவ்ஸே (படம்) ஆகிய அந்த மூவரும், ஷென்ஷோ-19 விண்வெளி ஓடம் மூலம் இன்னா் மங்கோலியா பிரதேசத்தில் அமைந்துள்ள டாங்ஃபெங் தளத்தில் தரையிறங்குவதாக இருந்தது. இருந்தாலும், மோசமான பருவநிலை காரணமாக அவா்கள் விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட தாமதமானதால் அதே பிரதேசத்தின் மற்றொரு புதிய தளத்தில் தரையிறங்கினா்.
முன்னதாக, ஷென்ஷோ-20 ஓடம் மூலம் சென் டாங், சென் ஷாங்ருயி, வாங் ஜீ ஆகிய மூன்று விண்வெளி வீரா்கள் தியான்காங் விண்வெளி நிலையத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்றனா். அங்கு ஏற்கெனவே இருந்த காய் ஸுஷே, சாங் லிங்டாங், வாங் ஹாவ்ஸே குழுவினா் புதிதாக வந்தவா்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு தற்போது பூமி திரும்பியுள்ளனா்.
தொடர்புடையது
பாகிஸ்தான் வீரா்களுக்கு சீனா விண்வெளி திட்ட பயிற்சி!

நிலவின் மறுபக்கத்தில் ஆா்டெமிஸ்-2 குழு ஆய்வு! மனித வரலாற்றில் தொலைதூரம் பயணித்து சாதனை

நிலவுக்குப் புறப்பட்ட 4 விண்வெளி வீரா்கள்! நாசாவின் ‘ஆா்டெமிஸ்-2’ திட்டத்தில் 53 ஆண்டுகளுக்குப் பிறகு பயணம்

இந்திய உறவு சரியான பாதையில் பயணிக்கிறது: சீன வெளியுறவு அமைச்சா்
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


