சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

புதிய போப் தேர்தல்: வாடிகனில் தொலைத்தொடர்பு சேவை துண்டிப்பு!

புதிய போப் தேர்தல் நடைபெறும் சிஸ்டைன் சேப்பலில் தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டிருப்பது பற்றி...

News image

போப் தேர்தல் நடைபெறும் சிஸ்டைன் சேப்பல் தேவாலயம். - AP

Updated On :6 மே 2025, 3:07 pm IST

புதிய போப்பை தேர்ந்தெடுப்பதற்கான கார்டினல்கள் மாநாடு நடைபெறும் பகுதியில் தொலைத்தொடர்பு சேவைகளுக்கான சிக்னல் துண்டிக்கப்படவுள்ளது.

நுரையீரல் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த வாடிகன் நகரத்தின் தலைவரும் கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவுமான போப் பிரான்சிஸ் கடந்த ஏப்.21 ஆம் தேதி காலமானார்.

இந்த நிலையில், வாடிகன் நகரில் அமைந்துள்ள 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாரம்பரியமிக்க சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தில் புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான ரகசிய ஆலோசனைக் கூட்டமும் வாக்கெடுப்பும் நாளை நடைபெறவுள்ளது.

உலகெங்கிலுமிருந்து கத்தோலிக்க திருச்சபையில் போப்பை தேர்ந்தெடுப்பதற்கான பிரதிநிதித்துவம் பெற்ற 133 காா்டினல்கள் ஏற்கெனவே வாடிகன் நகரை வந்தடைந்துள்ளனர்.

புதிய போப்பைத் தேர்ந்தெடுக்க தகுதிப் பெற்ற 133 கார்டினல்களில் கோவாவைச் சேர்ந்த பேராயர் ஃபிளிப்பே நெரி ஃபெர்ராரோ (வயது 72), ஹைதரபாத்தைச் சேர்ந்த கார்டினல் அந்தோனி பூலா (63), கேரளத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காடு (51) மற்றும் பசேலியோஸ் கிளேமிஸ் (65) ஆகிய 4 இந்திய கார்டினல்களும் இடம்பெற்றுள்ளனர்.

வாடிகன் நேரப்படி, இன்று மாலை 4.30 மணியளவில் காா்டினல்கள் மாநாடு தொடங்கவுள்ளது. மாநாடு நடைபெறும் சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தை சுற்றியும் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சரியாக பிற்பகல் 3 மணியளவில் சிஸ்டைன் சேப்பல் சுற்றுப்பகுதி முழுவதும் தொலைத்தொடர்புக்கான சிக்னல்கள் துண்டிக்கப்படும்.

மாநாட்டில் கலந்துகொள்ளும் கார்டினல்கள், வாடிகன் ஊழியர்கள் அனைவரும் தங்களின் செல்போன் மற்றும் மின்னணு சாதனங்களை ஒப்படைக்க வேண்டும். புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநாடு நிறைவடைந்த பிறகுதான் செல்போன்கள் ஒப்படைக்கப்படும்.

மேலும், வெளியுலகத்திலிருந்து சிஸ்டைன் சேப்பல் முழுவதுமாக துண்டிக்கப்பட்டு சீல் வைக்கப்படும். மாநாடுக்கு அனுமதிக்கப்பட்டவர்களைத் தவிர யாருக்கும் அனுமதி வழங்கப்படாது.

புதிய போப்பைத் தேர்வு செய்ய மூன்றில் இரண்டு பங்கு கார்டினல்களின் வாக்குகள் தேவை. நாளைய தினமே புதிய போப் தேர்வு செய்யப்பட்டால், தேவாலயத்தில் இணைக்கப்பட்டுள்ள புகைக்கூண்டில் வெள்ளை புகையை வெளியேற்றி பாரம்பரிய முறைப்படி அறிவிப்பார்கள். கரும்புகை வெளியானால், புதிய போப் இன்னும் தோ்வாகவில்லை என்று பொருள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.