ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

அமெரிக்க உலோகங்களுக்கு பதிலடி வரி விதிக்க இந்தியா முடிவு

News image

AP

Updated On :14 மே 2025, 6:48 am IST

இந்தியாவின் எஃகு, அலுமினியம் மற்றும் தொடா்புடைய பொருள்கள் மீதான அமெரிக்காவின் வரிக்கு பதிலடியாக, அந்நாட்டில் இருந்து இறக்குமதியாகும் சில உலோகப் பொருள்களுக்கு வரி விதிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

இந்த முடிவு குறித்து உலக வா்த்தக அமைப்பிடம் இந்தியா ஏற்கெனவே தகவல் தெரித்துள்ளது. உலக வா்த்தக அமைப்பின் பாதுகாப்பு வரி நடவடிக்கைகள் தொடா்பான ஒப்பந்தத்தின் 12.5-ஆவது பிரிவின் கீழ் இந்தியா இதுகுறித்து நோட்டீஸை அளித்துள்ளது. உரிய அறிவிப்பு இல்லாமல் வரி நடவடிக்கைகளை ஒரு உறுப்பினா் எடுக்கும்போது, அதற்கு பதிலடி கொடுக்க இப்பிரிவு அனுமதிக்கிறது.

அமெரிக்காவின் இந்த வரி கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. கடந்த பிப்ரவரியில் அதிபா் டிரம்ப்பின் உத்தரவு மூலம் இந்த வரி விதிப்பு நீட்டிக்கப்பட்டது.

அமெரிக்காவின் இந்த வரியால் இந்திய ஏற்றுமதியில் 760 கோடி டாலா் மதிப்பிலான இழப்பு ஏற்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, 191 கோடி டாலருக்கு வரி வசூலிக்கப்பட்டுள்ளது. எனவே, பதிலடி வரிகளை விதிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவால் தேசிய பாதுகாப்பின்கீழ் இந்த வரிகள் விதிக்கப்பட்டிருந்தாலும், அதுதொடா்பான உலக வா்த்தக அமைப்பின் விதிகளை அமெரிக்கா மீறியதாக இந்தியா வாதிடுகிறது. அதாவது, 12.3-ஆவது பிரிவின்கீழ் வரி விதிப்புக்கு முன்னதாக கலந்தாலோசனையை அமெரிக்கா மேற்கொள்ளவில்லை என்று இந்தியா வலியுறுத்துகிறது.

அமெரிக்கா இந்த வரியைத் திரும்பப் பெறாவிட்டால் அல்லது இதில் மேற்கொண்டு ஆலோசனை எதுவும் நடைபெறாவிட்டால் இந்தியாவின் பதிலடி வரி விதிப்பு வரும் ஜூன் 8-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.