ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!ஜம்மு காஷ்மீரில் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழா..! ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஓமர் அப்துல்லா!ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

அமெரிக்க பொருள்களுக்கு இந்தியாவில் முழு வரி விலக்கா? -டிரம்ப் அதிர்ச்சி தகவல்!

அமெரிக்க பொருள்களுக்கு இனி இந்தியாவில் ‘0%’ வரி? - டிரம்ப்

News image

AP

Updated On :22 ஜூலை 2025, 3:29 pm IST

தோஹா: அமெரிக்க பொருள்களுக்கு இந்தியாவில் முழு வரி விலக்கு அளிக்க இந்தியா சம்மதித்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிர்ச்சி தகவலொன்றை இன்று(மே 15) தெரிவித்திருக்கிறார்.

கத்தார் சென்றுள்ள டிரம்ப் தோஹா நகரில் நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ‘அமெரிக்க பொருள்களுக்கு இந்தியாவில் முழு வரி விலக்கு அளிக்க இந்தியா சம்மதித்திருப்பதாகவும், இதனால் இனிமேல் அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் தங்களின் ஐ-போன்களை இந்தியாவில் தயாரிக்க வேண்டிய அவசியமில்லை’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் மீதும் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கைகளை டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, தொடர்ச்சியாக உலக நாடுகள் விடுத்த கோரிக்கையை ஏற்று, மேற்கண்ட வரி விதிப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் ஜூலை 9-ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாகவும் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி டிரம்ப் அறிவித்தார்.

முன்னதாக, இந்தியாவை வரிக் கழுகு என்று விமர்சித்திருந்த டிரம்ப், அமெரிக்க பொருள்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அதிக வரியை பூஜ்ஜியமாக்க இந்தியா சம்மதித்துள்ளதாக இம்மாத தொடக்கத்தில் குறிப்பிடும்போதும் தெரிவித்திருந்தார், இன்றும் அதே கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இன்று பேசும்போது, இந்தியாவின் நலனை இந்தியாவே கவனித்துக்கொள்ளும் என்றும் சொல்லியிருக்கிறார் டிரம்ப்.

இதனிடையே, எஸ் அண்ட் பி குளோபல் நடத்திய ஆய்வின்படி, கடந்த ஆண்டில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதியாகும் ஐ-போன்கள் எண்ணிக்கை 3.1 மில்லியன் யூனிட்களாக உள்ளன. அதே ஆண்டில், அமெரிக்காவில் ஐ-போன் விற்பனை 75.9 மில்லியன் யூனிட்களாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த ஆண்டு ஜூன் காலாண்டில், அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் ஐ-போன்களில் பெரும்பாலானவை இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐ-போன்களாகவே இருக்கப் போகிறதென ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த மின்னணு சாதன தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் இந்தியாவில் ஐ-போன்களை தயாரித்து வரும் நிலையில், டிரம்ப்பின் கோரிக்கையை ஏற்று இந்தியாவில் ஐ-போன் தயாரிப்பை ஆப்பிள் நிறுத்தினால் அந்நிறுவன ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழல் உருவாகும் என்பது கவனிக்கத்தக்கது.

தோஹா: அமெரிக்க பொருள்களுக்கு இந்தியாவில் முழு வரி விலக்கு அளிக்க இந்தியா சம்மதித்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிர்ச்சி தகவலொன்றை இன்று(மே 15) தெரிவித்திருக்கிறார்.

கத்தார் சென்றுள்ள டிரம்ப் தோஹா நகரில் நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ‘அமெரிக்க பொருள்களுக்கு இந்தியாவில் முழு வரி விலக்கு அளிக்க இந்தியா சம்மதித்திருப்பதாகவும், இதனால் இனிமேல் அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் தங்களின் ஐ-போன்களை இந்தியாவில் தயாரிக்க வேண்டிய அவசியமில்லை’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் மீதும் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கைகளை டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, தொடர்ச்சியாக உலக நாடுகள் விடுத்த கோரிக்கையை ஏற்று, மேற்கண்ட வரி விதிப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் ஜூலை 9-ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாகவும் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி டிரம்ப் அறிவித்தார்.

முன்னதாக, இந்தியாவை வரிக் கழுகு என்று விமர்சித்திருந்த டிரம்ப், அமெரிக்க பொருள்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அதிக வரியை பூஜ்ஜியமாக்க இந்தியா சம்மதித்துள்ளதாக இம்மாத தொடக்கத்தில் குறிப்பிடும்போதும் தெரிவித்திருந்தார், இன்றும் அதே கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இன்று பேசும்போது, இந்தியாவின் நலனை இந்தியாவே கவனித்துக்கொள்ளும் என்றும் சொல்லியிருக்கிறார் டிரம்ப்.

இதனிடையே, எஸ் அண்ட் பி குளோபல் நடத்திய ஆய்வின்படி, கடந்த ஆண்டில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதியாகும் ஐ-போன்கள் எண்ணிக்கை 3.1 மில்லியன் யூனிட்களாக உள்ளன. அதே ஆண்டில், அமெரிக்காவில் ஐ-போன் விற்பனை 75.9 மில்லியன் யூனிட்களாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த ஆண்டு ஜூன் காலாண்டில், அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் ஐ-போன்களில் பெரும்பாலானவை இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐ-போன்களாகவே இருக்கப் போகிறதென ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த மின்னணு சாதன தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் இந்தியாவில் ஐ-போன்களை தயாரித்து வரும் நிலையில், டிரம்ப்பின் கோரிக்கையை ஏற்று இந்தியாவில் ஐ-போன் தயாரிப்பை ஆப்பிள் நிறுத்தினால் அந்நிறுவன ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழல் உருவாகும் என்பது கவனிக்கத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.