கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கக் கூடாதா? வீழ்கிறதா கோடிங்? 6000 பேரை பணிநீக்கம் செய்த மைக்ரோசாஃப்ட்

கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கக் கூடாதா? வீழ்கிறதா கோடிங் என 6000 பேரை பணிநீக்கம் செய்தது குறித்து மைக்ரோசாஃப்ட் விளக்கம்

News image
கணினி அறிவியல்- Center-Center-Chennai
Updated On :31 மே 2025, 6:26 am

DIN

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் அண்மையில் நடத்தப்பட்ட மிகப்பெரிய அளவிலான பணி நீக்க நடவடிக்கையின் காரணம் குறித்து அதன் தலைமை செயல் நிர்வாகி சத்யா நாதெல்லா விளக்கம் கொடுத்துள்ளார்.

நாதெல்லா கொடுத்திருக்கும் விளக்கத்தில், இந்த பணிநீக்க நடவடிக்கையானது, நிறுவனத்தின் உள் கட்டமைப்புகளின் சீரமைப்பு பணிக்காக எடுக்கப்பட்டதே தவிர, பணியாளர்களின் செயல்திறன் அடிப்படையிலானது அல்ல.

இது செயல்திறனை விட மறுசீரமைப்பு பற்றியது, என்று தலைமை நிர்வாக அதிகாரி மைக்ரோசாப்ட் ஊழியர்களிடம் கூறினார், அதே நேரத்தில் தொழில்நுட்ப மேம்பாட்டின் ஒரு பகுதியாக, எதிர்காலம் இருப்பதாக நம்பும் செயற்கை நுண்ணறிவில் (AI) அதிக கவனம் செலுத்தும் வகையில்தான், நிறுவனம் அதன் முன்னுரிமைகளை மறுசீரமைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

மைக்ரோசாஃப்ட் அலுவலக டவுன் ஹால் கூட்டத்தில் பேசிய மைக்ரோசாப்ட் தலைமை பிராடக்ட் அதிகாரி அபர்ணா சென்னபிரகதா, செயற்கை நுண்ணறிவு வருகையால், கோடிங் அல்லது கணினி அறிவியல் படிப்பது வீணாகிப் போகிறது என்ற கருத்தை தான் முற்றிலும் ஏற்கவில்லை என்று கூறுகிறார்.

"மக்கள் கணினி அறிவியலைப் படிக்கக்கூடாது அல்லது கோடிங் செத்துவிட்டது என்ற கருத்தை நான் அடிப்படையில் ஏற்கவில்லை," என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

குறிப்பாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் அதிக செயற்கை நுண்ணறிவுக்கான உள்கட்டமைப்புகளை உருவாக்க 80 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு திறன்களை விரிவுபடுத்துவதையும், பல்வேறு தளங்கள் மற்றும் சேவைகளில் அதன் உதவிகளை அறிமுகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும், நிறுவனத்தின் முன்னுரிமைகளில் ஏற்படும் இந்த மாற்றம்தான், பல்வேறு பணிநிலைகளுக்கு அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது.

குறிப்பாக தயாரிப்பு மேம்பாடு மற்றும் பொறியியலில், அவை மறுசீரமைக்கப்படுகின்றன அல்லது படிப்படியாக சிலவற்றை அகற்றும் நிலை ஏற்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.