3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

ஈரானின் ஏவுகணைகள் ஐரோப்பிய நாடுகளைத் தாக்கக் கூடும்! - அமெரிக்கா எச்சரிக்கை!

ஈரானின் ஏவுகணைகள் ஐரோப்பிய நாடுகளைத் தாக்கக் கூடும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பேச்சு...

News image

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ...

(கோப்புப் படம்)

Updated On :1 ஏப்ரல் 2026, 12:44 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ஈரானிடம் உள்ள ஏவுகணைகள் ஐரோப்பிய நாடுகள் வரை பாய்ந்து தாக்குதல் நடத்தும் திறன் வாய்ந்தவை என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அந்நாடுகளின் முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இத்துடன், சர்வதேச அளவில் எரிசக்தி ஏற்றுமதிகளுக்கு முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரானின் படைகள் முடக்கியுள்ளன. இதனால், பல்வேறு நாடுகளிலும் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஈரான் சமீபத்தில் பயன்படுத்திய ஏவுகணைகள் அந்நாட்டின் தலைமையால் நீண்டகாலமாக மறுக்கப்பட்டு வந்த ஆயுதத் திறன்களை வெளிப்படுத்துவதாகவும், அந்த ஏவுகணைகளால் ஐரோப்பிய நாடுகள் வரையில் பாய்ந்து தாக்குதல் நடத்த முடியும் எனவும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார்.

இதுபற்றி, அவர் கூறியதாவது:

”அமெரிக்காவின் நிலப்பரப்பை அடையும் நோக்கில் அவர்கள் (ஈரான்) ஏவுகணைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஈரானின் அதிநவீன ஆயுதங்களின் உருவாக்கம் மற்றும் அணுசக்தித் திட்டம் ஆகியவற்றை தடுப்பதற்காகவே அமெரிக்கா ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே அமெரிக்கா பேச்சுவார்த்தைகளுக்குத் தயார். அதிபர் டொனால்ட் டிரம்ப் போரை விடவும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவே விரும்புகிறார்” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களில் கடந்த பிப். 28 அன்று ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து, இருதரப்புக்கும் இடையில் போர் வெடித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.