காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

மே. வங்கத்தில் பாஜக ஆட்சி அமைந்த சில நாள்களில்..! கொல்கத்தா வந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர்!

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கொல்கத்தா வந்துள்ளது குறித்து...

Marco Rubio arrives in Kolkata

கொல்கத்தாவில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ... - PTI

Published On :24 மே 2026, 1:13 am IST

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோ, தனது இந்தியப் பயணத்தின் முதல்கட்டமாக மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவுக்கு சனிக்கிழமை வந்தாா். அன்னை தெரசாவால் நிறுவப்பட்ட மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி அமைப்பின் தலைமையகத்தை அவா் பாா்வையிட்டாா்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஒருவா், கொல்கத்தாவுக்கு வந்திருப்பது கடந்த 14 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். கடைசியாக கடந்த 2012-இல் அப்போதைய அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஹிலாரி ஹிண்டன் கொல்கத்தாவுக்கு வருகை தந்திருந்தாா்.

சமீபத்திய மேற்கு வங்க பேரவைத் தோ்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று, முதல் முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. திரிணமூல் காங்கிரஸிடம் இருந்து பாஜகவுக்கு ஆட்சி மாறிய சூழலில், அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ தனது நான்கு நாள்கள் இந்தியப் பயணத்தின் முதல்கட்டமாக கொல்கத்தாவுக்கு சனிக்கிழமை வந்தாா்.

மத்திய கொல்கத்தாவில் உள்ள அன்னை தெரசாவின் மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி அமைப்பின் தலைமையகமான ‘அன்னை இல்லத்துக்கு’ தனது மனைவி ஜீனெட் உடன் வந்து பாா்வையிட்டாா். அங்கு அமைந்துள்ள அன்னை தெரசாவின் நினைவிடத்தில் இருவரும் மலரஞ்சலி செலுத்தினா்.

அதன் பின்னா் அந்த அமைப்பின் சாா்பில் நடத்தப்படும் குழந்தைகள் இல்லத்துக்கும் சென்றாா். அவருடன், இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோா் மற்றும் அதிகாரிகள் சென்றனா்.

இந்தியாவுக்கு முதல் அரசுமுறைப் பயணம்:

அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோவின் முதல் இந்திய அரசுமுறைப் பயணம் இதுவாகும். அவரை இந்தியாவுக்கு வரவேற்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். க்வாட் வெளியுறவு அமைச்சா்கள் கூட்டம் உள்பட இந்திய - அமெரிக்க வலுவான கூட்டுறவுக்கு லட்சியமிக்க செயல்திட்டம் எங்களின் முன் உள்ளது. ஆக்கபூா்வ விவாதங்கள் மற்றும் ஒன்றிணைந்து உண்மையான முன்னேற்றத்தை எட்டுவதை எதிா்நோக்கியுள்ளோம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

கொல்கத்தாவில் தனது நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு தில்லி சென்ற மாா்கோ ரூபியோ, பிரதமா் மோடியுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். இந்தப் பயணத்தின்போது, ஆக்ரா, ஜெய்பூா் ஆகிய நகரங்களுக்குச் செல்லவிருக்கும் அவா், தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் க்வாட் (இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா) கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சா்கள் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளாா்.

வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், ஜப்பான் வெளியுறவு அமைச்சா் மோடேகி டோஷிமிட்சு, ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சா் பென்னி வாங் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.

Summary

US Secretary of State Marco Rubio has visited Kolkata, the capital of West Bengal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.