பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ 4 நாள் அரசு முறைப் பயணமாக சனிக்கிழமை (மே 23) காலை இந்தியாவின் கொல்கத்தா நகரத்துக்கு வந்துள்ளார்.
கொல்கத்தாவில் இயங்கி வரும் மறைந்த அன்னை தெரேசாவின் ஆதரவு இல்லங்களின் தலைமையிடமான மதர் ஹவுஸுக்கு நேரில் சென்ற அமைச்சர் ரூபியோ அங்குள்ள அதிகாரிகளுடன் உரையாடினார்.
இதனைத் தொடர்ந்து, புது தில்லிக்குச் சென்ற அமைச்சர் ரூபியோ பிரதமர் மோடியை நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பில், இருநாடுகளுக்கு இடையேயான உறவுகள் குறித்த முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், விரைவில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு வருகை தருமாறு பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சார்பில் அமைச்சர் ரூபியோ அழைப்பு விடுத்துள்ளார்.
இதையடுத்து, முதல்முறையாக இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோ ஜெய்ப்பூர் மற்றும் ஆக்ரா ஆகிய நகரங்களுக்கும் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனுக்குப் பிறகு அந்தப் பதவி வகிக்கும் ஒருவர் கொல்கத்தா வருகை தந்தது 14 ஆண்டுகளில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
US Secretary of State Marco Rubio met with PM Modi in person and held discussions.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே. வங்கத்தில் பாஜக ஆட்சி அமைந்த சில நாள்களில்..! கொல்கத்தா வந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர்!

டிரம்ப்பின் விமர்சனங்களுக்கு இடையே..! போப் 14-ம் லியோவை சந்தித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர்!

இந்தியா வருகிறார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோ!
அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு!
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher



