ஆர்டெமிஸ் 2 திட்டத்தின் கீழ் நிலவுக்குச் சென்ற விண்வெளி வீரர்கள் பூமியை நோக்கிய பயணத்தில் பாதி தூரத்தைக் கடந்துவிட்டதாக நாசா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள தேசிய வானூர்தி விண்வெளி நிலையம் (நாசா), கடைசியாக 1972 ஆம் ஆண்டு அப்போலோ 17 ராக்கெட் மூலம் நிலவுக்கு மனிதனை அனுப்பியிருந்தது.
அதன்பின்னர், 53 ஆண்டுகளாக நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தாமல் இருந்த நிலையில், கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் ஃபுளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து ஆர்டெமிஸ் -2 என்ற திட்டத்தின்கீழ் ஓரியன் விண்கலம் மூலம் 4 விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் நிலவுக்கு அனுப்பியது.
நிலவுக்கு மிக நெருக்கமாக பூமியில் இருந்து 4,06,771 கி.மீ. தொலைவில் பயணம் செய்து, விண்வெளி வீரர்கள் ரீட், விக்டர், கிறிஸ்டினா மற்றும் ஜெர்மி ஆகியோர் புதிய சாதனையைப் படைத்தனர். மேலும், நிலவின் பின்புறத்தை நேரில் கண்டவர்கள் என்ற மற்றொரு சாதனையையும் இவர்கள் படைத்தார்கள்.
சில ஆய்வுகளை மேற்கொண்ட அவர்கள், ஓரியன் விண்கலம் மூலம் மீண்டும் பூமியை நோக்கிய பயணத்தை தொடங்கியுள்ளனர்.
பூமியை நோக்கியப் பயணத்தில் பாதி தூரத்தை அவர்கள் கடந்துவிட்டதாகவும், வெள்ளிக்கிழமை இரவு 8.07 மணியளவில் (இந்திய நேரப்படி சனிக்கிழமை காலை 5.37 மணி) பசிபிக் பெருங்கடலில் சான் டியாகோ கடற்கரைப் பகுதியில் தரையிறகுவார்கள் என்று நாசா தெரிவித்துள்ளது.
அவர்களைப் பாதுகாப்பாக மீட்கும் பணிகளை அமெரிக்க கடற்படையுடன் இணைந்து நாசா மேற்கொண்டுள்ளது.
Summary
Artemis II Astronauts to Land in the Pacific Ocean Tomorrow!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாசாவின் 'ஆர்டெமிஸ் 2' புதிய சாதனை
நாசாவின் 'ஆர்டெமிஸ் 2' புதிய மைல்கல்! 42 நிமிஷங்கள் தொடர்பை இழந்ததால் பரபரப்பு! என்ன நடந்தது?
ஆர்டெமிஸ் 2: அரை நூற்றாண்டுக்குப் பின் நிலவை நோக்கி பயணித்த அமெரிக்கர்கள்!
நிலவை நோக்கி மீண்டும் பயணம்!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

