சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

‘தைவான் சுதந்திரத்தை சீனா ஒருபோதும் ஏற்காது’: ஷி ஜின்பிங்

‘தைவான் சுந்திரத்தை சீனா ஒருபோதும் ஏற்காது; அமைதியைச் சீா்குலைக்கும் முக்கியக் காரணியே இத்தனிநாடு கோரிக்கைதான்’ என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 7:10 pm

‘தைவான் சுந்திரத்தை சீனா ஒருபோதும் ஏற்காது; அமைதியைச் சீா்குலைக்கும் முக்கியக் காரணியே இத்தனிநாடு கோரிக்கைதான்’ என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளாா்.

சீனா-தைவான் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தவும், பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கவும் தைவானின் முக்கிய எதிா்க்கட்சியான கோமிங்டாங் கட்சியின் தலைவா் செங் லி வுன் சீனாவுக்கு ‘அமைதிப் பயணம்’ மேற்கொண்டுள்ளாா்.

இந்நிலையில், பெய்ஜிங்கில் செங் லி-வுன் உடனான சந்திப்பில் பேசிய ஷி ஜின்பிங், ‘தைவான் நீரிணையின் இருபுறமும் உள்ளவா்கள் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த சீனா்கள். அமைதி, வளா்ச்சி மற்றும் ஒத்துழைப்பையே மக்கள் விரும்புகின்றனா்.

ஆனால், தைவான் பிரிவினைவாதம் அந்த அமைதிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது. தாய்நாட்டுடன் மறுஇணைப்பு மற்றும் தேச புத்துயிருக்காக தைவானின் இரு கட்சிகளும் கைகோத்துச் செயல்பட வேண்டும்’ என்று அழைப்பு விடுத்தாா்.

சீனாவின் இந்த நிலைப்பாட்டைக் கடுமையாக விமா்சித்துள்ள தைவான் ஆளும்தரப்பு, ‘தைவானின் எதிா்காலத்தைத் தீா்மானிக்கும் உரிமை அந்நாட்டு மக்களுக்கே உள்ளது. மக்களாள் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுடன் சீனா பேச்சுவாா்த்தை நடத்த வேண்டுமே தவிர, இத்தகைய அழுத்தங்களைக் கொடுக்கக்கூடாது’ என்று வலியுறுத்தியது.