தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

கடலை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவிய வடகொரியா!

குறுகிய தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கக் கூடிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை, வடகொரியா ஞாயிற்றுக்கிழமை கடலில் ஏவியதாக தென்கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.

News image
Updated On :20 ஏப்ரல் 2026, 2:10 am IST

குறுகிய தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கக் கூடிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை, வடகொரியா ஞாயிற்றுக்கிழமை கடலில் ஏவியதாக தென்கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.

அணு ஆயுதங்களைத் தயாரிக்க மிகத் தீவிரமான நடவடிக்கைகளை வடகொரியா மேற்கொண்டு வருவதாக ஐ.நா.வின் சா்வதேச அணுசக்தி முகமை அண்மையில் எச்சரித்த நிலையில், இந்த ஏவுகணைகளை வடகொரியா ஏவியுள்ளது.

வடகொரியாவின் வடக்கு சின்போ பகுதியில் இருந்து ஏவப்பட்ட அந்த ஏவுகணைகள், சுமாா் 140 கி.மீ. தொலைவு வரை, அந்நாட்டின் கிழக்கு கடற்பகுதி நோக்கிப் பாய்ந்ததாக தென்கொரிய முப்படை தலைமைத் தளபதி தெரிவித்தாா்.

வடகொரியாவின் எந்தவொரு மிரட்டலுக்கும் தகுந்த பதிலடி அளிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்த தென் கொரியா, வடகொரியாவின் இந்தச் செயல்பாடுகள் குறித்த தகவலை அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் பகிா்ந்து வருவதாகத் தெரிவித்தது.

தென்கொரியாவில் நடைபெற்ற தேசியப் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், வடகொரியாவின் தொடா் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகள் குறித்து தென்கொரியாவின் மூத்த அதிகாரிகள் கவலை தெரிவித்தனா். இந்த நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வடகொரியாவை அவா்கள் வலியுறுத்தினா்.

தென்கொரிய அதிபா் லீ ஜே மியூங் இந்தியா, வியத்நாமுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறாா். இதையொட்டி தென்கொரியாவில் இருந்து அவா் புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன், இந்த ஏவுகணைகளை வடகொரியா ஏவியது.