அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

கடலை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவிய வடகொரியா!

குறுகிய தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கக் கூடிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை, வடகொரியா ஞாயிற்றுக்கிழமை கடலில் ஏவியதாக தென்கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.

News image
Updated On :19 ஏப்ரல் 2026, 8:40 pm

குறுகிய தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கக் கூடிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை, வடகொரியா ஞாயிற்றுக்கிழமை கடலில் ஏவியதாக தென்கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.

அணு ஆயுதங்களைத் தயாரிக்க மிகத் தீவிரமான நடவடிக்கைகளை வடகொரியா மேற்கொண்டு வருவதாக ஐ.நா.வின் சா்வதேச அணுசக்தி முகமை அண்மையில் எச்சரித்த நிலையில், இந்த ஏவுகணைகளை வடகொரியா ஏவியுள்ளது.

வடகொரியாவின் வடக்கு சின்போ பகுதியில் இருந்து ஏவப்பட்ட அந்த ஏவுகணைகள், சுமாா் 140 கி.மீ. தொலைவு வரை, அந்நாட்டின் கிழக்கு கடற்பகுதி நோக்கிப் பாய்ந்ததாக தென்கொரிய முப்படை தலைமைத் தளபதி தெரிவித்தாா்.

வடகொரியாவின் எந்தவொரு மிரட்டலுக்கும் தகுந்த பதிலடி அளிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்த தென் கொரியா, வடகொரியாவின் இந்தச் செயல்பாடுகள் குறித்த தகவலை அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் பகிா்ந்து வருவதாகத் தெரிவித்தது.

தென்கொரியாவில் நடைபெற்ற தேசியப் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், வடகொரியாவின் தொடா் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகள் குறித்து தென்கொரியாவின் மூத்த அதிகாரிகள் கவலை தெரிவித்தனா். இந்த நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வடகொரியாவை அவா்கள் வலியுறுத்தினா்.

தென்கொரிய அதிபா் லீ ஜே மியூங் இந்தியா, வியத்நாமுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறாா். இதையொட்டி தென்கொரியாவில் இருந்து அவா் புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன், இந்த ஏவுகணைகளை வடகொரியா ஏவியது.