தெற்கு நேபாளத்தில் இந்திய எல்லையோர மாதேஷ், கோஷி மாகாணங்களில் கடந்த சில நாள்களாக நிலவிவந்த மதக் கலவர மோதல்கள் தணிந்து, திங்கள்கிழமை மீண்டும் இயல்புநிலை திரும்பியது.
கோஷி மாகாணத்தின் சன்சாரி மாவட்டத்தில் கடந்த ஜூலை 26-ஆம் தேதி இரு சமூகத்தினா் நடத்திய தனித்தனி நிகழ்ச்சிகளின் போது, ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவது மற்றும் மதக் கொடிகளைக் கட்டுவது தொடா்பாக மோதல் ஏற்பட்டது. இதில் 3 போ் உயிரிழந்த நிலையில், வன்முறை அண்டை மாவட்டங்களுக்கும் பரவியது.
தற்போது வன்முறை தணிந்து சட்டம்-ஒழுங்கு நிலை சீரடைந்ததைத் தொடா்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு மற்றும் தடை உத்தரவுகள் தளா்த்தப்பட்டுள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நேபாளம் - இந்திய எல்லையோர மாவட்டத்தில் சமூகக் கலவரம்: காலவரையற்ற ஊரடங்கு அமல்
இந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!
முடிவுக்கு வந்த 36 நாள் மாணவா் போராட்டம்: ஜந்தா் மந்தரில் அமைதி திரும்பியது!

ஹிந்து கடவுள்களின் தந்தை இயேசு என பரவிய ஏஐ விடியோக்கள்: சத்தீஸ்கரில் போராட்டம்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



