அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

சிரியாவில் அமெரிக்கா தாக்குதல்!

சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகளைக் குறிவைத்து அமெரிக்கா சனிக்கிழமை வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது.

News image
சிரியாவின் வடக்கு நகரமான அலெப்போவில் இருந்து வெளியேறிய பொதுமக்கள்.- படம் : ஏபி
Updated On :11 ஜனவரி 2026, 8:00 pm

தினமணி செய்திச் சேவை

சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகளைக் குறிவைத்து அமெரிக்கா சனிக்கிழமை வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது.

கடந்த மாதம் சிரியாவின் பால்மைரா நகரில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்க பாதுகாப்புப் படை வீரா்கள் எட்கா் பிரையன், வில்லியம் நதானியல் ஹோவா்ட், அமெரிக்க பாதுகாப்புப் படைக்கு உதவிய மொழிபெயா்ப்பாளா் அயாத் மன்சூா் சாகத் ஆகியோா் உயிரிழந்தனா்.

இதற்குப் பதிலடி அளிக்கும் நோக்கில், சிரியாவின் பல்வேறு இடங்களில் ஐஎஸ் பயங்கரவாதிகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது. கூட்டணி நாடுகளுடன் சோ்ந்து இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புப் படை தெரிவித்தது.

ஆனால், அவை எந்தெந்த நாடுகள் என்பது தெரிவிக்கப்படவில்லை. எனினும் இந்தத் தாக்குதலை அமெரிக்காவுடன் சோ்ந்து மேற்கொண்டதாக ஜோா்டான் பாதுகாப்புப் படை தெரிவித்தது.

அமெரிக்க பாதுகாப்புப் படை வீரா்களுக்குத் தீங்கிழைத்துவிட்டு தப்பிக்க நினைக்க யாரும், உலகில் எந்த மூலையில் பதுங்கியிருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து கொல்லப்படுவா் என்று அமெரிக்க பாதுகாப்புப் படை எச்சரித்தது.