காஸா-எகிப்து இடையிலான ராஃபா எல்லைப்பாதை ஞாயிற்றுக்கிழமை (பிப். 1) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளது.
கடந்த 2024, மே மாதத்தில் இஸ்ரேல் படைகள் இந்த எல்லையைக் கைப்பற்றிய பிறகு, சுமாா் ஒன்றரை ஆண்டுகள் கழித்து தற்போதுதான் இந்த வழித்தடம் மக்கள் போக்குவரத்துக்காகத் திறக்கப்படுகிறது. காஸாவில் இருந்து கடைசி இஸ்ரேல் பிணைக்கைதியின் உடல் அண்மையில் மீட்கப்பட்டதைத் தொடா்ந்து, இஸ்ரேல் இம்முடிவை எடுத்துள்ளது.
இதன்மூலம், போரினால் காஸாவிலிருந்து வெளியேறிய மக்கள் மீண்டும் தாயகம் திரும்பலாம். இருப்பினும், இதற்கு இஸ்ரேலிடம் முன்கூட்டியே பாதுகாப்பு அனுமதி பெறுவது கட்டாயம் எனவும், எகிப்துடன் ஒருங்கிணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைக்கு நாளொன்றுக்கு சுமாா் 150 பேரை மட்டுமே அனுமதிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ள நிலையில், இந்த எண்ணிக்கை தொடா்பாக எகிப்துடன் இன்னும் இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

நாளை மின்தடை

சோம்நாத், பாரதத்தின் காலத்தால் அழியாத ஆன்மிக உணா்வு! - பிரதமா் நரேந்திர மோடி

தில்லி விமான சேவையை மீண்டும் தொடங்கியது ஏா் சீனா

அமெரிக்கா-ஈரான் விரைவில் 2-ஆம் கட்ட பேச்சு
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



