பிரான்ஸில் சமீபகாலமாக கடும் வெப்பம் நிலவி வருகிறது. ஜூன் மாதத்தில் பிரான்ஸின் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்ததால், நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக 2,000-க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும், ஜூன் மாதத்தின் கடைசி வாரத்தில், முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் இறப்புகள் 29 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, 45 வயதுக்கு மேற்பட்டோரிடையே உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.
மேலும், கடும் வெப்பநிலை தொடர்ந்து நீடிப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, வரும் நாட்களில் ஐரோப்பா கண்டம் முழுவதும் மேலும் தீவிரமான வெப்பநிலையே நிலவும் என வானிலை மையங்கள் எச்சரித்துள்ளன.
Summary
France records 30% surge in deaths amid Europe’s record-breaking heatwave
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தலைநகரை வதைக்கும் கடும் வெப்பம்! தென்மேற்கு பருவமழை தாமதத்தால் 2 ஆண்டுகளில் இல்லாத மிக வெப்பம் பதிவு!

பிரான்ஸில் கடும் வெப்ப அலை: ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பு!

தில்லியில் 43 டிகிரி செல்சியஸை கடந்த வெப்பம்: இன்று மழைக்கு வாய்ப்பு






