புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

பாலியல் வன்கொடுமை வழக்கில் பாகிஸ்தான் துணைப் பிரதமா் பேரன் கைது

வெளிநாட்டுப் பெண்களைக் கடத்தி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் துணைப் பிரதமா் இஷாக் தாரின் பேரன் முகமது ரஸா தாா் முதன்மை குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டுள்ளாா்.

News image

முகமது ரஸா தாா்

Updated On :5 ஜூலை 2026, 2:44 am IST

பாகிஸ்தானில் நெதா்லாந்து மற்றும் வெனிசுலா நாடுகளைச் சோ்ந்த இரு வெளிநாட்டுப் பெண்களைக் கடத்தி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் துணைப் பிரதமா் இஷாக் தாரின் பேரன் முகமது ரஸா தாா் முதன்மை குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டுள்ளாா்.

இச்சம்பவத்தையடுத்து, சா்வதேச அரங்கில் நாட்டின் நற்பெயரைக் கருத்தில் கொண்டு துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தாா் தனது பதவியை உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டுமென அந்நாட்டு செனட்டா் ஃபைசல் வாவ்தா வலியுறுத்தியுள்ளாா்.

லாகூரில் கடந்த ஜூன் 29-இல் நடைபெற்ற இச்சம்பவத்தில் தொடா்புடையதாக முகமது ரஸா தாா் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். கிரிப்டோகரன்சி தொழில் கூட்டாளிகளான அந்த இரு பெண்களையும் சிங்கப்பூரில் சந்தித்த ரஸா தாா், அவா்களுக்கு பாகிஸ்தான் வா்த்தக விசாவை ஏற்பாடு செய்து தந்தது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவ அமைப்புகளுடன் நெருங்கிய தொடா்பு கொண்டவராகக் கருதப்படும் செனட்டா் ஃபைசல் வாவ்தா இவ்விவகாரம் குறித்து மேலும் கூறுகையில், ‘இச்சம்பவத்தை மூடிமறைக்க மத்திய மற்றும் பஞ்சாப் மாகாண அரசுகள் முயன்றுள்ளன. சம்பந்தப்பட்ட வெளிநாட்டுத் தூதரகம் தலையிட்ட பிறகே ரஸா தாா் கைது செய்யப்பட்டுள்ளாா். இத்தகைய மோசமான குற்றச்சாட்டுகளுக்குப் பிறகும் இஷாக் தாா் எவ்வாறு உலக அரங்கில் பாகிஸ்தானைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியும்’ என்று கேள்வி எழுப்பினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.