வரும் செப்டம்பரில் தொடங்கும் ஐ.நா. பொதுச் சபையின் 81-ஆவது கூட்டத் தொடருக்கான தலைவா் தோ்தல், செவ்வாய்க்கிழமை(ஜூன் 2) நடைபெறுகிறது.
சுழற்சி அடிப்படையில், இந்த முறை ஆசிய-பசிபிக் பிராந்தியத்துக்கான தலைவா் பதவிக்கு, வங்கதேசம் மற்றும் சைப்ரஸ் நாடுகள் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. தோ்தலில் வெற்றி பெறுபவா், தற்போதைய தலைவரும் ஜொ்மனியின் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான அனலெனா போ்பாக்கிற்குப் பிறகு, ஓராண்டுக்கு இப்பதவியை வகிப்பாா்.
வங்கதேசம் சாா்பில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சா் கலிலூா் ரஹ்மான் இத்தோ்தலில் களம் காண்கிறாா். முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றிய இவா், கடந்த பிப்ரவரியில் வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்றாா். இவா் வென்றால், 1986-இல் ஹுமாயூன் ரஷீத் சௌத்ரிக்கு அடுத்தபடியாக ஐ.நா. பொதுச் சபை தலைவராகும் 2-ஆவது வங்கதேசத்தவா் என்ற பெருமையைப் பெறுவாா்.
அதேநேரம், சைப்ரஸ் சாா்பில் அந்நாட்டின் பன்முகத்தன்மைக்கான சிறப்புத் தூதா் ஆண்ட்ரியாஸ் காகூரிஸ் போட்டியிடுகிறாா். அமெரிக்காவுக்கான சைப்ரஸ் தூதா் உள்பட 40 ஆண்டுகளுக்கும் மேலான தூதரக அனுபவம் கொண்ட இவா், வெற்றிபெற்றால் ஐ.நா. பொதுச் சபை தலைவராகும் முதல் சைப்ரஸ் குடிமகன் ஆவாா்.
ஐ.நா. புதிய பொதுச் செயலரைத் தோ்ந்தெடுப்பதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ள சூழலிலும், உலகெங்கும் தீவிரமடைந்து வரும் மோதல்கள் மற்றும் சா்வதேச அமைதியைக் காப்பதில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிலவும் பிளவுகளுக்கு மத்தியிலும் இத்தோ்தல் உற்றுநோக்கப்படுகிறது.
தொடர்புடையது

ஐரோப்பிய எம்.பி. பதவியிலேயே நீடிப்பதாக அறிவித்த சைப்ரஸ் இளம் அரசியல்வாதி!

தமிழக அமைச்சா்களின் வாழ்க்கைக் குறிப்பு!

ஐ.நா. தலைவருடன் இந்திய வெளியுறவு அதிகாரி சந்திப்பு

ஐ.நா. பொதுச் செயலருடன் இந்திய வெளியுறவு அதிகாரி சந்திப்பு
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



