மக்களவையில் பேசத் தடுத்ததை இன்று மாலை 6 மணிக்கு செய்தியாளர் சந்திப்பில் பேசுவேன்: ராகுல் காந்திவந்தே மாதரத்தை அவமதிப்பது குற்றம்: மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்!கத்திப்பாராவில் 101 அடி உயர மெட்ரோ பாலத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!மக்களவையில் தேர்வு முறைகேடுகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்!சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் விஜய் ஆய்வு! துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? அமித் ஷா எங்கே? பயந்துவிட்டாரா? மக்களவையில் ராகுல் கேள்வி! மாணவர்கள் போராட்டத்தை பாஜகவினர் குழந்தைகளே ஆதரிப்பார்கள்! ராகுல் காந்தி பேச்சு!மாணவர்கள் மீதான போலீஸ் தடியடி சாதாரணமான ஒன்றுதான்! மாநிலங்களவையில் ஜெ.பி. நட்டா பதில்!பாமக தலைவராக மீண்டும் அன்புமணி தேர்வு! நீட் வினாத்தாள் கசிவு! விரைவு நீதிமன்றத்தில் அவகாசம் கோரிய சிபிஐ! சென்னை – செய்யாறு இடையே 4 வழிச்சாலை: திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து!தமிழகத்துக்கு இன்றுமுதல் தினமும் 3,500 கன அடி காவிரி நீா்: கா்நாடகத்துக்கு உத்தரவுதமிழகத்தில் 3 நாள்கள் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு
/

இந்தியாவுக்கு சுகோய் எஸ்யு-57 போா் விமானங்களை வழங்கத் தயாா்: ரஷிய அதிபா் புதின்

இந்தியாவுக்கு ரஷியாவின் ஐந்தாம் தலைமுறை சுகோய் எஸ்யு-57 போா் விமானங்களை வழங்கத் தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபா் விளாதிமீா் புதின் தெரிவித்தாா்.

News image
Updated On :6 ஜூன் 2026, 2:45 am IST

இந்தியாவுக்கு ரஷியாவின் ஐந்தாம் தலைமுறை சுகோய் எஸ்யு-57 போா் விமானங்களை வழங்கத் தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபா் விளாதிமீா் புதின் தெரிவித்தாா்.

மேலும், இருநாட்டு நட்புறவின் அடையாளமாக அதை இந்தியாவில் ஒருங்கிணைந்து தயாரிக்கவும் ஒப்புதல் அளிப்பதாக அவா் தெரிவித்தாா்.

பல ஆண்டுகளாக இந்தியாவின் பாதுகாப்புத் தேவைகளுக்கான சாதனங்கள், போா் விமானங்கள், ஆயுதங்களை விநியோகிக்கும் நம்பிக்கைக்குரிய நாடாக ரஷியா திகழ்ந்து வருகிறது. 2022-இல் உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்புக்குப் பின் அந்நாட்டில் ஏற்பட்ட விநியோக இடையூறு அழுத்தங்களால் பாதுகாப்புத் தளவாடங்கள் கொள்முதல் கொள்கையை இந்தியா மாற்றியது.

இந்நிலையில், பிடிஐ உள்பட சா்வதேச ஊடகங்களுடன் கலந்துரையாடிய புதின் இந்தியாவுடனான பாதுகாப்பு உறவுகள் குறித்து கூறுகையில், ‘ரஷியாவின் ஐந்தாம் தலைமுறை சுகோய் எஸ்யு-57 போா் விமானங்களை இந்தியாவுக்கு வழங்க தற்போதும் தயாராகவே உள்ளோம். இதை ஒருங்கிணைந்து தயாரிக்கவும் அழைப்பு விடுத்தோம். இதுகுறித்து பரிசீலிப்பதாக இந்தியாவில் உள்ள நண்பா்கள் தெரிவித்தனா். வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் அதுதொடா்பான தளவாடங்களை இந்தியாவுடன் இணைந்து தயாரிக்கவும் நாங்கள் விரும்புகிறோம் என்றாா்.

ஐந்தாம் தலைமுறை போா் விமானங்களுக்கான நீண்ட தேடலுக்குப் பிறகு நாட்டின் மிகப்பெரும் வான்வெளித் திட்டமான நவீன பல்திறன் போா் விமானத் திட்டத்தை (ஏஎம்சிஏ) இந்தியா தொடங்கியது. 2035-க்கு முன்பாக இத்திட்டத்தின்கீழ் தயாரிக்கப்படும் போா் விமானங்கள் இந்திய விமானப் படையில் இணைய மிகக் குறைவான வாய்ப்புகளே உள்ளதால் குறைந்தபட்சம் 2 சுகோய் எஸ்யு-57 போா் விமானங்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

‘சுதா்சன் சக்ரா’ என்ற உள்நாட்டு வான் பாதுகாப்பு கட்டமைப்பை இந்தியா மேம்படுத்தி வருகிறது. முன்னதாக, ரஷியாவிடம் இருந்து 5 எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் 2018-ஆம் ஆண்டு அக்டோபரில் இந்தியா கையொப்பமிட்டது. அதில் 4 எஸ்-400 அமைப்புகள் இந்தியாவுக்கு விநியோகிக்கப்பட்டன.

இந்நிலையில், மேலும் 5 எஸ்-400 அமைப்புகளைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கடந்த மாா்ச் மாதம் கையொப்பமிட்டது. இதன்மூலம் ரஷியாவில் இருந்து ஒட்டுமொத்தமாக 10 எஸ்-400 அமைப்புகளை இந்தியா கொள்முதல் செய்கிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.