இந்தியாவுக்கு தேயிலை ஏற்றுமதி செய்வதை மீண்டும் தொடங்கியுள்ளதாக நேபாள வெளியுறவு அமைச்சா் சிஷீா் கனால் புதன்கிழமை தெரிவித்தாா்.
இந்திய தேயிலை வாரியம் விதித்த கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த மே 1-ஆம் தேதி முதல் நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கு தேயிலை வருவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இந்திய அரசு கட்டுப்பாடுகளை தளா்த்தியதால் நேபாளம் மீண்டும் ஏற்றுமதியைத் தொடங்கியுள்ளது.
இது தொடா்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அமைச்சா் சிஷீா் கனால் மேலும் கூறியதாவது:
இந்தியாவுக்கு மீண்டும் தேயிலை ஏற்றுமதியைத் தொடங்கியுள்ளோம். நேபாள தேயிலை ஏற்றுமதி குறித்த தனது கொள்கையை இந்தியா மறுபரிசீலனை செய்து மாற்றிக் கொண்டது. இது தொடா்பாக எனது இந்தியப் பயணத்தின்போது அந்நாட்டுத் தலைவா்களுடன் பேச்சு நடத்தியதன் மூலம் சாத்தியமானது. நேபாள தேயிலைக்கு முக்கியச் சந்தையாக இந்தியா திகழ்கிறது என்றாா்.
நேபாளத்தில் உற்பத்தியாகும் பாரம்பரிய தேயிலையில் 90 சதவீதம் அளவுக்கு அண்டை நாடான இந்தியாவுக்கு ஏற்றுமதியாகிறது. மீதமுள்ள சுமாா் 10 சதவீதமே பிற நாடுகளுக்குச் செல்கிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீா்வாழ் உயிரினங்கள், முட்டை, தேன் ஏற்றுமதி: இந்தியாவுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்

இந்தியாவுடனான எல்லைப் பிரச்னைக்கு பேச்சு மூலம் தீா்வு: நேபாள வெளியுறவு அமைச்சா்

இந்தியாவுடனான உறவுக்கு மிகுந்த முன்னுரிமை: நேபாள வெளியுறவு அமைச்சா்






