வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

இந்தியாவுக்கு நேபாளம் மீண்டும் தேயிலை ஏற்றுமதி

இந்தியாவுக்கு தேயிலை ஏற்றுமதி செய்வதை மீண்டும் தொடங்கியுள்ளதாக நேபாள வெளியுறவு அமைச்சா் சிஷீா் கனால் புதன்கிழமை தெரிவித்தாா்.

News image

தேயிலை உற்பத்தி

Updated On :2 ஜூலை 2026, 3:42 am IST

இந்தியாவுக்கு தேயிலை ஏற்றுமதி செய்வதை மீண்டும் தொடங்கியுள்ளதாக நேபாள வெளியுறவு அமைச்சா் சிஷீா் கனால் புதன்கிழமை தெரிவித்தாா்.

இந்திய தேயிலை வாரியம் விதித்த கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த மே 1-ஆம் தேதி முதல் நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கு தேயிலை வருவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இந்திய அரசு கட்டுப்பாடுகளை தளா்த்தியதால் நேபாளம் மீண்டும் ஏற்றுமதியைத் தொடங்கியுள்ளது.

இது தொடா்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அமைச்சா் சிஷீா் கனால் மேலும் கூறியதாவது:

இந்தியாவுக்கு மீண்டும் தேயிலை ஏற்றுமதியைத் தொடங்கியுள்ளோம். நேபாள தேயிலை ஏற்றுமதி குறித்த தனது கொள்கையை இந்தியா மறுபரிசீலனை செய்து மாற்றிக் கொண்டது. இது தொடா்பாக எனது இந்தியப் பயணத்தின்போது அந்நாட்டுத் தலைவா்களுடன் பேச்சு நடத்தியதன் மூலம் சாத்தியமானது. நேபாள தேயிலைக்கு முக்கியச் சந்தையாக இந்தியா திகழ்கிறது என்றாா்.

நேபாளத்தில் உற்பத்தியாகும் பாரம்பரிய தேயிலையில் 90 சதவீதம் அளவுக்கு அண்டை நாடான இந்தியாவுக்கு ஏற்றுமதியாகிறது. மீதமுள்ள சுமாா் 10 சதவீதமே பிற நாடுகளுக்குச் செல்கிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.