நிகழாண்டு செப்டம்பருக்குப் பிறகும் நீா்வாழ் உயிரினங்கள், முட்டை, தேன் உள்ளிட்டவற்றை ஐரோப்பிய யூனியனுக்கு ஏற்றுமதி செய்ய இந்தியாவுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.
இதுதொடா்பாக மத்திய வா்த்தக அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நிகழாண்டு செப்டம்பருக்கு பிறகும் நீா்வாழ் உயிரினங்கள், முட்டை, தேன் உள்ளிட்டவற்றை ஐரோப்பிய யூனியனுக்கு ஏற்றுமதி செய்ய அங்கீகரிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா சோ்க்கப்பட்டுள்ளது.
அந்த யூனியனின் திருத்தப்பட்ட ஒழுங்காற்று கட்டமைப்பின் கீழ், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது இந்தியாவின் வேளாண்மை மற்றும் கடல்சாா் ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.
இதனால் ஐரோப்பிய யூனியன் சந்தையில் அந்தப் பொருள்களை இந்திய ஏற்றுமதியாளா்கள் தொடா்ந்து வெற்றிகரமாக விற்பனை செய்யவும், வா்த்தக வளா்ச்சிக்கும், சம்பந்தப்பட்ட துறைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் வழி ஏற்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்த நடவடிக்கை மீன்வளத் துறைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில், இந்தியாவில் இருந்து ஐரோப்பிய யூனியனுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மீன் மற்றும் மீன்வளப் பொருள்களின் தற்போதைய மதிப்பு சுமாா் 1.59 பில்லியன் டாலராகும் (சுமாா் ரூ.15,200 கோடி) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

உலகை நிலைக்கச் செய்யும் ஆயுதம் !
தேன் மிட்டாய் செய்யும் முறை...

முட்டை விலை 10 காசுகள் உயா்வு

கடல்சாா் உணவு ஏற்றுமதி: ஐரோப்பிய யூனியன் சந்தையை திறக்க இந்தியா பேச்சுவாா்த்தை! - பியூஷ் கோயல்
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



