திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

எபோலா தொற்று: உகாண்டா- காங்கோ எல்லை மூடியதால் வர்த்தகர்கள் அவதி!

உகாண்டா-காங்கோ எல்லை மூடியதைப் பற்றி..

News image

உகாண்டா-காங்கோ எல்லை - AP

Updated On :6 ஜூன் 2026, 12:23 pm IST

உகாண்டா-காங்கோ எல்லை மூடிய நிலையில் வர்த்தகர்கள் பெரும் இழப்பைச் சந்தித்துவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எபோலா தொற்று காராணமாக உகாண்டாவிற்கும் - காங்கோவிற்கும் இடையேயான எல்லை மூடப்பட்டுள்ளது. இதனால், வாகனங்கள் செல்ல முடியாமல் மணிக்கணக்காக எல்லையில் காத்திருக்கின்றனர்.

உகாண்டாவிற்கு கொண்டு செல்லப்படவிருந்த, காய்கள், பழங்கள் உள்ளிட்ட வர்த்தக பொருள்களிலிருந்து நீர் கசியத் தொடங்கியிருப்பதாகவும், எல்லையை திறக்காவிட்டால் பொருள்கள் அனைத்தும் நாசமாகும் என வர்த்தகர்கள் புலம்பி வருகின்றனர்.

எபோலா தொற்று எல்லைத் தாண்டி பரவுவதைத் தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, லாரிகள் உகாண்டாவிற்குள் நுழையவோ அல்லது வெளியேறவோ தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வியாழக்கிழமையன்று போண்ட்வே எல்லைச் சாவடி வழியாக லாரிகள் செல்வதற்கான அனுமதி வழங்கப்படும் என உகாண்டா வர்த்தகர் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால் எல்லை திறக்கப்படவில்லை. பொருள்கள் அனைத்தும் அழுகிக்கொண்டிருக்கிப்பதாக வர்த்தகவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

காங்கோவின் கிழக்கு இட்டுரி மாகாணத்தில் எபோலா பரவல் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு, மே 28 அன்று உகாண்டா மேற்கு எல்லையை மூடியது.

தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள், மனிதாபிமான உதவிகள், சரக்கு போக்குவரத்து அல்லது பாதுகாப்பு காரணங்கள் போன்ற அவசரச் சூழல்களில் மட்டுமே விதிவிலக்குகள் அளிக்கப்பட்டன.

ஆனால் சமீப நாள்களில், கிழக்கு காங்கோவில் எபோலா பரவல் அதிகமாக இருந்ததால், உகாண்டாவின் எல்லை மாவட்டமான கசெஸேவில் அதிகாரிகள் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கினர்.

எபோலா தொற்று குறித்த அச்சத்தாலேயே கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதை அறிந்திருந்தாலும், லாரிகளை நீண்ட நேரம் நிறுத்தி வைப்பதால், பொருள்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மீன்களைக் காங்கோ நகரங்களான பெனி, புடெம்போ ஆகிய இடங்களுக்குக் கொண்டு செல்லப்படவிருந்தன. அந்தக் காங்கோ நகரங்கள் வடக்கு கிவு மாகாணத்தில் உள்ளனவே தவிர, எபோலா பரவலின் மையப்பகுதியான இட்டுரி மாகாணத்தில் இல்லை. எனவே, சரக்கு உரிய இடத்திற்குக் கொண்டுசெல்லாவிடில் பெரிய பண இழப்பு ஏற்படும். எபோலா எங்கள் உழைப்பை வீணாக்கிவிட்டது என்று வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

Leah Masika was on the verge of tears as she thought of her valuable consignment of plantain stuck in a long convoy of trucks on both sides of the Uganda-Congo border.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.