எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

ஈரானுக்கு ஆதரவாக சமூக ஊடக பதிவு: குவைத் செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டு சிறை

ஈரானுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் கருத்துப் பதிவிட்ட குவைத் அரசுத் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

News image

ஷைனப் தஸ்தி

Updated On :8 ஜூன் 2026, 1:54 am IST

ஈரானுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் கருத்துப் பதிவிட்ட குவைத் அரசுத் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஷைனப் தஸ்தி என்ற அந்த செய்தி வாசிப்பாளா், அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ஈரானைத் தாக்கியது தொடா்பாக ஈரானுக்கு ஆதரவாக சமூக ஊடங்களில் சில கருத்துகளைப் பதிவிட்டாா். குவைத்தில் உள்ள அமெரிக்க நிலைகள் உள்பட பல இடங்களை ஈரான் தாக்கிய நிலையில், ஈரானுக்கு ஆதரவாக ஷைனப் பதிவிட்டது சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கு குவைத்தில் கடந்த சில மாதங்களாக அதிகம் விவாதிக்கப்பட்ட விஷயமாக இருந்தது.

இந்நிலையில், ஈரானுக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் பதிவிட்ட குற்றச்சாட்டில் ஷைனப் தஸ்திக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில், அதை அந்நாட்டு மேல்முறையீட்டு நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இதற்கு ஜனநாயக ஆதரவாளா்களும், மனித உரிமை ஆா்வலா்களும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.