ஓமன் கடல்பகுதியில் எண்ணெய்க் கப்பல் தீப்பிடித்த நிலையில் அதிலிருந்த 24 மாலுமிகளை இந்திய கடற்படையினர் மீட்டுள்ளனர்.
ஓமன் கடற்பகுதியின் அருகில் பலாவ் நாட்டின் கொடியுடன் வந்த ‘எம்டி-மேவ்ரிக்ஸ்’ எண்ணெய்க் கப்பல் தீப்பிடித்தது.
மஸ்கட்டிற்கு தெற்கில் உள்ள கடல்பகுதியில் மதியம் 1.30 மணியளவில் தீப்பிடித்த தகவல் கிடைத்ததாகவும், அதனைத் தொடர்ந்து அந்தக் கப்பலில் பணியாற்றிய 24 இந்திய மாலுமிகளை மீட்டதாகவும் இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
அவர்கள் அனைவரும் தற்போது பாதுகாப்பாக இருப்பதாக இந்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் கூறியுள்ளது.
கப்பலின் ஒரு பகுதி தாக்கப்பட்ட நிலையில் மாலுமிகள் அனைவரும் இந்திய கடற்படையின் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர். இதுதொடர்பான விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
ஆனால், கப்பலில் உண்டான சேதம், தாக்குதல் நடத்தியது யார் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. அமெரிக்க ராணுவம் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தாக்குதல் நடத்தியிருக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
Summary
Oil tanker catches fire off the coast of Oman: Indian Navy rescues 24 crew members
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமலுக்கு வந்தது ஓமனுடனான வா்த்தக ஒப்பந்தம்: ஏற்றுமதியாளா்களுக்கு சிறந்த வாய்ப்பு என சைமா தகவல்

ஓமன் கடல் பகுதியில் இந்திய கப்பல் மீது தாக்குதல்: யுஏஇ கண்டனம்

ஓமன் கடல் பகுதியில் இந்திய வணிக கப்பல் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்

அமெரிக்க படையிடம் சிக்காமல் தப்பிய ஈரான் கச்சா எண்ணெய்க் கப்பல்: பல ஆயிரம் கி.மீ. தொலைவு ரகசிய பயணம்
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP




