உக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தப்படுவதாக பல்கேரியாவில் புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து, பல்கேரிய பாதுகாப்புத் துறை அமைச்சர் டிமிதார் ஸ்டோயானோவ் செவ்வாய்க்கிழமை(ஜூன் 9) செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது : “உக்ரைனில் நீடிக்கும் போரைப் போர்க்களத்தில் தீர்க்க முடியாதென்பதை நாங்கள் ஏற்கெனவே தெளிவாகத் உரைத்துவிட்டோம். நாம் கண்முனே கண்டுகொண்டிருப்பது ஆக்கிரமிப்புக்கானதொரு போர்; எவ்வளவு ஆயுதம் குவிக்கப்பட்டாலும் அதன் முடிவில் மனித உயிர்களின் இழப்பே நேரிடும்.
ஆகவே, உக்ரைனுக்கு அதிக மக்களே தேவை; அதைவிடுத்து அதிக ஆயுதங்கள் தேவையில்லை. உக்ரைன் ராணுவத்துக்கு போதுமான அளவு ஆயுதங்கள் உள்ளன. ஆகவே, நாங்கள் உக்ரேனிய ராணுவத்துக்கு அதிக ஆயுதங்கள் வழங்குவதை ஊக்குவிக்கப் போவதில்லை” என்று தெரிவித்தார்.
நேட்டோ கூட்டமைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஓர் அங்கமான பல்கேரியா, உக்ரைன் மீது கடந்த 2022-இல் ரஷியா ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியதிலிருந்து உக்ரைனுக்கு ஆயுத விநியோகம் செய்து வந்தது. இந்த நிலையில், பல்கேரியாவில் பிரதமர் ரூமென் ராதேவ் தலைமையிலான புதிய அரசு கடந்த ஏப்ரலில் ஆட்சியமைத்தது. உக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ள புதிய பல்கேரிய அரசின் முடிவு, ரஷியாவின் தாக்குதல்களைத் தாங்கிக்கொண்டு எதிர்வினையாற்றி வரும் உக்ரைனுக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
Summary
Bulgaria's new government to stop supplying weapons to Ukraine
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெள்ளக்கோவிலில் ஜூலை 28 முதல் 5 நாள்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்

ஆடுதுறை பகுதியில் நாளை மின் நிறுத்தம்

திருவானைக்காவல் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

தூத்துக்குடி மாநகா் பகுதியில் இன்று குடிநீா் விநியோகம் நிறுத்தம்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



