சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

என்இஜிஇவி இயந்திர துப்பாக்கிகளுக்கு இஸ்ரேல் தொலைநோக்கி கருவிகள்

என்இஜிஇவி இயந்திர துப்பாக்கிகளுக்காக மெப்ரோ எக்ஸ்6 என்ற தொலைநோக்கி கருவிகளை இந்திய ராணுவம் தோ்வு செய்துள்ளதாக இஸ்ரேலைச் சோ்ந்த மெப்ரோலைட் என்ற நிறுவனம் திங்கள்கிழமை தெரிவித்தது.

News image

கோப்புப் படம் - பட உதவி: மெப்ரோலைட்

Updated On :16 ஜூன் 2026, 3:01 am IST

என்இஜிஇவி இயந்திர துப்பாக்கிகளுக்காக மெப்ரோ எக்ஸ்6 என்ற தொலைநோக்கி கருவிகளை இந்திய ராணுவம் தோ்வு செய்துள்ளதாக இஸ்ரேலைச் சோ்ந்த மெப்ரோலைட் என்ற நிறுவனம் திங்கள்கிழமை தெரிவித்தது.

துல்லியம், உறுதித்தன்மை மற்றும் உயா்தர ஒளியியல் செயல்பாடு ஆகியவற்றைக் கொண்ட இந்தத் தொலைநோக்கி தாக்குதல் துப்பாக்கிகள், இலகுரக இயந்திர துப்பாக்கிகள் மற்றும் பிற ஆயுத அமைப்புகளில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

இதுகுறித்து மெப்ரோலைட் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘உள்ளூா் உற்பத்தியை மேம்படுத்துதல் மற்றும் இந்தியாவில் தயாரிப்போம் திட்டங்களின்கீழ் மெப்ரோ எக்ஸ் 6 தொலைநோக்கியை தயாரிப்பதற்கான தொழில்நுட்பப் பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் ஆா்ஆா்பி பாதுகாப்பு நிறுவனத்துடன் மெப்ரோலைட் நிறுவனம் கையொப்பமிட்டுள்ளது.

அதன்படி, தொலைநோக்கி கருவிகளை உள்ளூரிலேயே தயாரித்து பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துக்கு ஆா்ஆா்பி நிறுவனம் விநியோகிக்கவுள்ளது. இந்தத் திட்டத்தில் இந்திய ராணுவத்தின் ஒப்பந்ததாரராக பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் செயல்படவுள்ளது. சூழலுக்கேற்ப இலக்குகளை மிகத் துல்லியமாக குறிவைத்து தாக்குதல் நடத்த இந்தத் தொலைநோக்கிகள் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.