சூடான் மோதலில் டிரோன் தாக்குதல்களில் இந்தாண்டு மட்டும் 1,000-கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவப் படையான விரைவுப் படைக்கும் இடையே கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் மோதல் நடைபெற்று வருகின்றது. இதில், டிரோன் தாக்குதல்கள் மிகவும் தீவிரமானதாக மாறியுள்ளது.
டிரோன் தாக்குதல் காரணமாக இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்து மட்டும் இதுவரை 1,000-க்கும் மேற்பட்டோர் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுபற்றி ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் உரையாற்றிய உயர் ஆணையர் வோல்கர் டர்க், “சூடானில் டிரோன் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால், கொடூரமான மோதல் மற்றும் தாக்குதல்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன.
இந்தாண்டு ஜனவரி முதல் மே வரையான டிரோன் தாக்குதல்களில் மட்டும் இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதனை, நாங்கள் ஆவணப்படுத்தியுள்ளோம். இதுமட்டுமின்றி, அங்கு பாலியல் வன்கொடுமைகளும், குற்றங்களும் அதிகரித்துள்ளன” என வருத்தம் தெரிவித்தார்.
சூடானில் மோதல் காரணமாக இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். மேலும், 1.1 கோடிக்கும் மேலான மக்கள் தங்கள் வசிப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.
இது, உலகின் மிகப்பெரிய இடம்பெயர்வுகளில் ஒன்றாகப் பார்க்கப்படும் நிலையில் அங்கு பஞ்சமும் அதிகரித்துள்ளது.
Summary
Over 1,000 killed in drone attacks in Sudan!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








