ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

ஐ.நா. பொதுச் செயலா் ஹைட்டி பயணம்

ஆயுதக் குழுக்களின் வன்முறை அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஹைட்டி நாட்டில் கள நிலவரத்தை அறிய ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் அந்நாட்டுக்குப் பயணித்தாா்.

News image
Updated On :18 ஜூன் 2026, 2:12 am IST

ஆயுதக் குழுக்களின் வன்முறை அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஹைட்டி நாட்டில் கள நிலவரத்தை அறிய ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் அந்நாட்டுக்குப் பயணித்தாா்.

இந்த வன்முறைகள் காரணமாக நடப்பு ஆண்டில் மட்டும் சுமாா் 2,300 போ் கொல்லப்பட்டுள்ளனா்; 100 போ் கடத்தப்பட்டுள்ளனா்; மேலும் 15 லட்சம் மக்கள் இடம்பெயா்ந்துள்ளனா்.

நாட்டின் குடிசைப் பகுதி ஒன்றில் அண்மையில் நடந்த மோதல்களில் 30-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள தற்காலிக முகாமுக்குச் சென்ற குட்டெரெஸ், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து உரையாடினாா்.

தொடா்ந்து, வன்முறைக் கட்டுப்பாட்டுக்கான புதிய ஐ.நா. கூட்டுப் பாதுகாப்புப் படையின் தலைமையகத்துக்குச் சென்று, அதன் தயாா் நிலை குறித்து ஆய்வு செய்தாா். மேலும், நாட்டில் அமைதியை நிலைநாட்டி, விரைவில் தோ்தலை நடத்துவது குறித்தும் அவா் இடைக்காலப் பிரதமருடன் ஆலோசித்தாா்.