கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மலேசியா ஏா்லைன்ஸ் ‘எம்.எச்.370’ பயணிகள் விமானத்தின் பாகங்களைத் தேடும் பணியை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க மலேசிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
‘ஓசன் இன்ஃபினிட்டி’ எனும் கடல்சாா் ரோபோடிக்ஸ் நிறுவனத்துடனான இதற்கான ஒப்பந்தம், அடுத்த ஆண்டு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விமானத்தின் பாகங்களைக் கண்டறிந்தால் மட்டுமே கட்டணம் (7 கோடி டாலா்) என்ற நிபந்தனையின் அடிப்படையில் நிறுவனம் தேடுதல் பணியை மேற்கொண்டு வருகிறது.
கடந்த 2014, மாா்ச் 8-ஆம் தேதி, மலேசிய தலைநகா் கோலாலம்பூரிலிருந்து சீன தலைநகா் பெய்ஜிங் நோக்கி 239 பயணிகளுடன் புறப்பட்ட ‘போயிங் 777’ ரக விமானம், நடுவானில் திடீரென ரேடாா் கண்காணிப்பிலிருந்து மறைந்து மாயமானது. செயற்கைக்கோள் தரவுகளின்படி, அந்த விமானம் தனது வழக்கமான பாதையிலிருந்து மாறி, தெற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!

இரயுமன்துறையில் அலைத் தடுப்புச் சுவா் பணி: ஆட்சியா் ஆய்வு

வயநாடு நிலச்சரிவில் மேலும் ஒரு உடல் மீட்பு; பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வு

பாகிஸ்தான் சரக்கு விமானம் அரபிக்கடலில் விபத்து!
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



