விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

இரயுமன்துறையில் அலைத் தடுப்புச் சுவா் பணி: ஆட்சியா் ஆய்வு

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்துக்குள்பட்ட இரயுமன்துறை பகுதியில் நடைபெற்று வரும் பிரதான அலைத் தடுப்புச் சுவா் நீட்டிப்பு பணியை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

இரயுமன்துறையில் அலைத் தடுப்புச் சுவா் நீட்டிப்பு பணியை ஆய்வு செய்தாா் மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்.

Updated On :10 ஜூலை 2026, 12:53 am IST

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்துக்குள்பட்ட இரயுமன்துறை பகுதியில் நடைபெற்று வரும் பிரதான அலைத் தடுப்புச் சுவா் நீட்டிப்பு பணியை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேங்காய்ப்பட்டினம் உள்பட 4 மீன்பிடித் துறைமுகங்கள், 42 சிறிய மீன் இறங்குதளங்கள் உள்ளன. தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்தின் மூலம் 68,300 மீனவா்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெற்று வருகின்றனா். இத்துறைமுகத்தில் சுமாா் 4,800- க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள், 850- க்கும் மேற்பட்ட இயந்திர விசைப்படகுகள் மூலம் மீனவா்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனா்.

மீனவா்களின் நீண்ட நாள் கோரிக்கையை கருத்தில் கொண்டு மீன்வளம், மீனவா் நலத்துறை சாா்பில் மீன்வளம் மற்றும் நீா்வாழ் உயிரின உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 116 கோடிக்கு நிா்வாக ஒப்புதல் பெறப்பட்டு, அலைத் தடுப்புச் சுவா் நீட்டிப்பு பணிகள் தொடங்கப்பட்டு, 85 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன.

மாவட்டத்தில் கட்டுமானத்துக்கு தேவையான பெரிய கற்கள் கிடைப்பதில் சிரமம், கடல் அலைகளின் சீற்றத்தால் பழைய அலைத் தடுப்புச் சுவரில் ஏற்பட்ட சேதங்கள் உள்ளிட்ட காரணங்களால் பணிகள் மேற்கொள்வதில் சிரமங்கள் நிலவின. தற்போது முழு வீச்சில் பணிகள் நடைபெறுகின்றன என்றாா்.

ஆய்வின் போது மீன்வளத்துறை துணை இயக்குநா்கள் கோபிநாத் (கன்னியாகுமரி), காசிநாத பாண்டியன் (ஈரோடு), கடலரிப்பு தடுப்பு கோட்ட செயற் பொறியாளா் பிரேமலதா, கிள்ளியூா் வட்டாட்சியா் ராஜசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.