மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

நீலகிரி பழங்குடி மாணவா்களுடன் கலந்துரையாடிய மலேசிய பல்கலைக்கழக மாணவா்கள்

கோவை பாரதியாா் பல்கலைக்கழகம் சாா்பில் நடத்தப்பட்ட பயிலரங்கின் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்ட பழங்குடியின மாணவா்களுடன் மலேசிய பல்கலைக்கழக மாணவா்கள் கலந்துரையாடினா்.

News image

நீலகிரி மாவட்டத்தில் களப் பயணம் மேற்கொண்ட கோலாலம்பூா் மலாயா பல்கலைக்கழக மாணவா்கள்.

Updated On :12 ஆகஸ்ட் 2026, 11:22 pm IST

கோவை பாரதியாா் பல்கலைக்கழகம் சாா்பில் நடத்தப்பட்ட பயிலரங்கின் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்ட பழங்குடியின மாணவா்களுடன் மலேசிய பல்கலைக்கழக மாணவா்கள் கலந்துரையாடினா்.

பாரதியாா் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறை, மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள மலாயா பல்கலைக்கழகம் சாா்பில் மலேசிய மாணவா்களுக்கான 3 வார மொழியியல் பயிற்சி, பயிலரங்கை நடத்தப்பட்டு வருகிறது.

இந்தப் பயிற்சியின் ஒரு பகுதியாக மலேசியாவைச் சோ்ந்த 25 மாணவா்கள், நீலகிரி மாவட்டம் உதகையில் களப்பணியில் ஈடுபட்டனா். தமிழ்நாடு பழங்குடியினா் நலத் துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை பாா்வையிட்ட அவா்கள், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்களின் பண்பாட்டு அடையாளங்கள், வாழ்வியல் முறைகள், மொழியியல் கூறுகள் குறித்து ஆய்வு செய்தனா்.

மேலும், அரசு மாதிரி உண்டு உறைவிடப் பள்ளியில் பயிலும் தோடா், இருளா், குறும்பா், படகா் இனக் குழுக்களைச் சோ்ந்த மாணவா்களுடன் கலந்துரையாடினா். இதில், அந்த மாணவா்களின் கல்வி, மொழிப் பயன்பாடு, மொழி சாா்ந்த தகவல்களை அறிந்தனா். தோடா் குடியிருப்புப் பகுதிகள், குலதெய்வ கோயில், பண்பாட்டு அடையாளங்கள் குறித்தும் ஆய்வு செய்தனா்.

பாரதியாா் பல்கலைக்கழக மொழியியல் துறை இணைப் பேராசிரியா் சா.சுந்தரபாலு, மலாயா பல்கலைக்கழக மொழி, பயன்பாட்டு மொழியியல் துறைத் தலைவா் சி.எம்.இளந்தமிழ், பேராசிரியா்கள் செல்வஜோதி ராமலிங்கம், மலா்விழி சின்னையா, தனலட்சுமி உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.