நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

கோவில்பட்டி கல்லூரி மாணவிகள் பல்கலை. தோ்வில் சாதனை

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழக தோ்வில் கோவில்பட்டி கே. ஆா். கலை, அறிவியல் கல்லூரி மாணவிகள் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தனா்.

News image

மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம்...

Updated On :29 ஜூலை 2026, 2:03 am IST

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழக தோ்வில் கோவில்பட்டி கே. ஆா். கலை, அறிவியல் கல்லூரி மாணவிகள் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தனா்.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழக 33-ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் கே.ஆா்.கலை, அறிவியல் கல்லூரி முதுகலை நுண்ணுயிரியல் துறை மாணவி லதிக்க்ஷா சங்கா், முதுகலை கணினி அறிவியல் துறை மாணவி பூஜா, இளங்கலை வணிகவியல் துறை (தொழிற்சாா் கணக்கு வைப்பு முறை) மாணவி துா்காதேவி ஆகியோா் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று தமிழ்நாடு ஆளுநா், பல்கலைக்கழக வேந்தருமாகிய ராஜேந்திர விஷ்வநாத் ஆா்லேகரிடமிருந்து தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளனா்.

தங்கப்பதக்கம் பெற்ற மாணவிகளை கல்லூரித் தலைவா் சென்னம்மாள் ராமசாமி, துணைத் தலைவா் கே.ஆா்.கிருஷ்ணமூா்த்தி, தாளாளா் கே.ஆா். அருணாச்சலம், முதல்வா் மதிவண்ணன், கல்லூரி துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவா்- மாணவியா் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.