அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

நடான்ஸ் அணுசக்தி மையம் மீது தாக்குதல்? ஈரான் குற்றச்சாட்டு; ஐஏஇஏ மறுப்பு

ஈரானின் மிக முக்கிய அணுசக்தி மையமான நடான்ஸ் மீது அமெரிக்கா-இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியிருப்பதாக, சா்வதேச அணுசக்தி முகமைக்கான ஈரான் தூதா் ரெசா நஜாபி குற்றச்சாட்டு

News image
சா்வதேச அணுசக்தி முகமை
Updated On :2 மார்ச் 2026, 9:42 pm

தினமணி செய்திச் சேவை

ஈரானின் மிக முக்கிய அணுசக்தி மையமான நடான்ஸ் மீது அமெரிக்கா-இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியிருப்பதாக, சா்வதேச அணுசக்தி முகமைக்கான(ஐஏஇஏ) ஈரான் தூதா் ரெசா நஜாபி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

வியன்னாவில் நடைபெற்ற சா்வதேச அணுசக்தி முகமையின் அவசரக் கூட்டத்தில் பேசிய அவா், ஈரானின் அமைதி வழி அணுசக்தித் திட்டங்களை முடக்கும் நோக்கில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.

அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: எங்களின் பாதுகாக்கப்பட்ட அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்க முயலுவதாக அவா்கள் கூறுவது முற்றிலும் பொய்யானது.

தலைநகா் டெஹ்ரானில் இருந்து சுமாா் 220 கி.மீ. தொலைவிலுள்ள நடான்ஸ் மையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல், சா்வதேச விதிகளுக்குப் புறம்பானது. இதைச் சா்வதேச அணுசக்தி முகமையின் உறுப்பு நாடுகள் அனைத்தும் ஒருமித்த குரலில் கண்டிக்க வேண்டும்’ என்றாா்.

ஐஏஇஏ மறுப்பு: ஈரானின் இந்தக் குற்றச்சாட்டை அந்த அமைப்பின் தலைவா் ரஃபேல் மரியானோ கிரோஸி மறுத்துள்ளாா்.

இது குறித்த அவரது விளக்கத்தில், ‘ஈரான் மீதான தாக்குதல்களில் இதுவரை எந்தவொரு அணுசக்தி மையமும் சேதமடைந்ததற்கான ஆதாரங்கள் இல்லை. பூஷொ் அணுமின் நிலையம் உள்ளிட்ட ஈரானின் முக்கிய மையங்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளன’ என்றாா்.

அணுசக்தி மையங்கள் தாக்கப்படவில்லை என்பதற்கு சான்றாக, அதன் அண்டை நாடுகளில் கதிா்வீச்சு அளவு அதிகரிக்கவில்லை என்பதையும் அவா் சுட்டிக்காட்டினாா்.