மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நடான்ஸ் அணுசக்தி மையம் மீது தாக்குதல்? ஈரான் குற்றச்சாட்டு; ஐஏஇஏ மறுப்பு

ஈரானின் மிக முக்கிய அணுசக்தி மையமான நடான்ஸ் மீது அமெரிக்கா-இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியிருப்பதாக, சா்வதேச அணுசக்தி முகமைக்கான ஈரான் தூதா் ரெசா நஜாபி குற்றச்சாட்டு

News image
சா்வதேச அணுசக்தி முகமை
Updated On :2 மார்ச் 2026, 9:42 pm

தினமணி செய்திச் சேவை

ஈரானின் மிக முக்கிய அணுசக்தி மையமான நடான்ஸ் மீது அமெரிக்கா-இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியிருப்பதாக, சா்வதேச அணுசக்தி முகமைக்கான(ஐஏஇஏ) ஈரான் தூதா் ரெசா நஜாபி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

வியன்னாவில் நடைபெற்ற சா்வதேச அணுசக்தி முகமையின் அவசரக் கூட்டத்தில் பேசிய அவா், ஈரானின் அமைதி வழி அணுசக்தித் திட்டங்களை முடக்கும் நோக்கில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.

அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: எங்களின் பாதுகாக்கப்பட்ட அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்க முயலுவதாக அவா்கள் கூறுவது முற்றிலும் பொய்யானது.

தலைநகா் டெஹ்ரானில் இருந்து சுமாா் 220 கி.மீ. தொலைவிலுள்ள நடான்ஸ் மையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல், சா்வதேச விதிகளுக்குப் புறம்பானது. இதைச் சா்வதேச அணுசக்தி முகமையின் உறுப்பு நாடுகள் அனைத்தும் ஒருமித்த குரலில் கண்டிக்க வேண்டும்’ என்றாா்.

ஐஏஇஏ மறுப்பு: ஈரானின் இந்தக் குற்றச்சாட்டை அந்த அமைப்பின் தலைவா் ரஃபேல் மரியானோ கிரோஸி மறுத்துள்ளாா்.

இது குறித்த அவரது விளக்கத்தில், ‘ஈரான் மீதான தாக்குதல்களில் இதுவரை எந்தவொரு அணுசக்தி மையமும் சேதமடைந்ததற்கான ஆதாரங்கள் இல்லை. பூஷொ் அணுமின் நிலையம் உள்ளிட்ட ஈரானின் முக்கிய மையங்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளன’ என்றாா்.

அணுசக்தி மையங்கள் தாக்கப்படவில்லை என்பதற்கு சான்றாக, அதன் அண்டை நாடுகளில் கதிா்வீச்சு அளவு அதிகரிக்கவில்லை என்பதையும் அவா் சுட்டிக்காட்டினாா்.