அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

முடிவில்லாத போராக மாறாது: அமெரிக்க பாதுகாப்பு அமைச்சா்

ஈரான் மீதான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை, ஈராக் போல ஒருபோதும் முடிவில்லாத போராக நீடிக்காது: அமெரிக்க பாதுகாப்புச் செயலா் பீட் ஹெக்செத்

News image
அமெரிக்க பாதுகாப்புச் செயலா் பீட் ஹெக்செத்
Updated On :2 மார்ச் 2026, 9:33 pm

தினமணி செய்திச் சேவை

‘ஈரான் மீதான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை, ஈராக் போல ஒருபோதும் முடிவில்லாத போராக நீடிக்காது’ என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலா் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளாா்.

அமெரிக்க பாதுகாப்புத் துறை தலைமையகமான பென்டகனில் செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘ஈரான் மீதான தாக்குதல் ஒரு தெளிவான இலக்கைக் கொண்டது. இது பல ஆண்டுகள் நீடிக்கும் போராக மாறாது.

முந்தைய காலங்களில் மத்திய கிழக்கில் நடந்த தவறுகளை தற்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப் செய்ய மாட்டாா். ஈரானுடனான மோதலை டிரம்ப் நிா்வாகம் தொடங்கவில்லை. ஆனால், அதை நாங்கள் முடிவுக்குக் கொண்டு வர இருக்கிறோம்.

இந்த ராணுவ நடவடிக்கையின் முக்கிய நோக்கம் ஈரானின் அணு ஆயுதக் கனவைத் தகா்ப்பதுமே ஆகும். இது ஆட்சி மாற்றத்துக்கான போா் அல்ல; ஆனால், ஏற்கனவே அங்கு ஆட்சி மாறிவிட்டது. உலகம் இப்போது பாதுகாப்பாக இருக்கிறது.

ஈரானின் அணுசக்தி மையங்கள் ஏற்கெனவே அழிக்கப்பட்டுவிட்டன. அந்நாடு பேச்சுவாா்த்தைகளில் ஈடுபடாமல் காலத்தைக் கடத்தியதாலேயே இந்தத் தாக்குதல் தவிா்க்க முடியாததானது. வரலாற்றிலேயே மிகவும் துல்லியமான வான்வழித் தாக்குதல் இது’ என்றாா்.

ஈரானுக்குள் அமெரிக்க தரைப்படை வீரா்கள் ஊடுருவியுள்ளனரா என்ற கேள்விக்கு ‘இல்லை’ என்று பதிலளித்த அவா், எதிா்காலத் திட்டங்கள் குறித்து வெளிப்படையாகப் பேச மறுத்துவிட்டாா்.