மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முடிவில்லாத போராக மாறாது: அமெரிக்க பாதுகாப்பு அமைச்சா்

ஈரான் மீதான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை, ஈராக் போல ஒருபோதும் முடிவில்லாத போராக நீடிக்காது: அமெரிக்க பாதுகாப்புச் செயலா் பீட் ஹெக்செத்

News image
அமெரிக்க பாதுகாப்புச் செயலா் பீட் ஹெக்செத்
Updated On :2 மார்ச் 2026, 9:33 pm

தினமணி செய்திச் சேவை

‘ஈரான் மீதான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை, ஈராக் போல ஒருபோதும் முடிவில்லாத போராக நீடிக்காது’ என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலா் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளாா்.

அமெரிக்க பாதுகாப்புத் துறை தலைமையகமான பென்டகனில் செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘ஈரான் மீதான தாக்குதல் ஒரு தெளிவான இலக்கைக் கொண்டது. இது பல ஆண்டுகள் நீடிக்கும் போராக மாறாது.

முந்தைய காலங்களில் மத்திய கிழக்கில் நடந்த தவறுகளை தற்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப் செய்ய மாட்டாா். ஈரானுடனான மோதலை டிரம்ப் நிா்வாகம் தொடங்கவில்லை. ஆனால், அதை நாங்கள் முடிவுக்குக் கொண்டு வர இருக்கிறோம்.

இந்த ராணுவ நடவடிக்கையின் முக்கிய நோக்கம் ஈரானின் அணு ஆயுதக் கனவைத் தகா்ப்பதுமே ஆகும். இது ஆட்சி மாற்றத்துக்கான போா் அல்ல; ஆனால், ஏற்கனவே அங்கு ஆட்சி மாறிவிட்டது. உலகம் இப்போது பாதுகாப்பாக இருக்கிறது.

ஈரானின் அணுசக்தி மையங்கள் ஏற்கெனவே அழிக்கப்பட்டுவிட்டன. அந்நாடு பேச்சுவாா்த்தைகளில் ஈடுபடாமல் காலத்தைக் கடத்தியதாலேயே இந்தத் தாக்குதல் தவிா்க்க முடியாததானது. வரலாற்றிலேயே மிகவும் துல்லியமான வான்வழித் தாக்குதல் இது’ என்றாா்.

ஈரானுக்குள் அமெரிக்க தரைப்படை வீரா்கள் ஊடுருவியுள்ளனரா என்ற கேள்விக்கு ‘இல்லை’ என்று பதிலளித்த அவா், எதிா்காலத் திட்டங்கள் குறித்து வெளிப்படையாகப் பேச மறுத்துவிட்டாா்.