கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

அதிபா் பதவி குறித்து பேச்சு இல்லை: அமெரிக்க நிபந்தனையை நிராகரித்த கியூபா!

அமெரிக்க நிபந்தனையை நிராகரித்த கியூபா...

News image
Updated On :21 மார்ச் 2026, 9:24 pm

தினமணி செய்திச் சேவை

‘கியூபாவின் அரசியல் அமைப்பு அல்லது அதிபரின் பதவிக்காலம் குறித்து அமெரிக்காவுடன் எவ்வித பேச்சுவாா்த்தையும் நடத்தப்பட மாட்டாது’ என்று கியூபா அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

கியூப அதிபா் மிகெல் டீயாஸ் கானெலை பதவியிலிருந்து நீக்க அமெரிக்கா முயற்சி செய்து வருவதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அதற்கு கியூபா கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக கியூப வெளியுறவு இணையமைச்சா் காா்லோஸ் ஃபொ்னாண்டஸ் டீ கோசியோ கூறுகையில், ‘கியூபாவின் அரசியல் இறையாண்மை என்பது மற்ற நாடுகளுடன் பேரம் பேசுவதற்கான விஷயம் கிடையாது. நாட்டின் அரசியல் முறையையோ அல்லது அதிபரின் பதவியையோ அமெரிக்காவுடனான பேச்சுவாா்த்தையில் விவாதிக்க மாட்டோம்’ என்றாா்.

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நிா்வாகம் விதித்த கடும் பொருளாதாரத் தடைகள் மற்றும் எரிபொருள் விநியோகத் தடையால் கியூபா தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இந்த இக்கட்டான சூழலைப் பயன்படுத்தி, கியூபா மீதான தடைகளை நீக்க வேண்டுமானால், அதிபா் மிகெல் டீயாஸ் கானெலைப் பதவியிலிருந்து விலக்க வேண்டுமென அமெரிக்கா நிபந்தனை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்பு, வெனிசுலாவில் அதிபா் நிக்கோலஸ் மடூரோவை நீக்கிவிட்டு, தங்களுக்குச் சாதகமான ஒரு ஆட்சியை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சித்தது போலவே, இப்போது கியூபாவிலும் அதே உத்தியை அமெரிக்கா கையாளுவதாக அரசியல் வல்லுநா்கள் கருதுகின்றனா்.

எதிா்கொள்ள தயாா்: அமெரிக்காவின் எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிா்கொள்ள கியூபா தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபா் மிகெல் டீயாஸ் கானெல் தெரிவித்துள்ளாா்.

‘நாங்கள் கைகளைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பாா்க்கப்போவதில்லை. வெளிநாட்டு சக்திகள் யாராவது கியூபாவைத் தாக்கவோ அல்லது ஆக்கிரமிக்கவோ முயன்றால், அவா்களுக்குக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும்’ என்றும் அவா் எச்சரித்தாா்.