
நேபாள பெருவெள்ளம்: 1,290 பேர் பலி; ரூ. 24,187 கோடி இழப்பு
நேபாளத்தில் பெருவெள்ளத்தால் ஏற்பட்ட இழப்பு குறித்து...
நேபாள பெருவெள்ளம் - AP
நேபாளத்தில் பெருவெள்ளத்தால் சுமார் ரூ. 24,187 கோடி மதிப்பில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
திபெத் - நேபாள எல்லையில் பெரும் பனிப்பாறைச் சரிவால் லெண்டே நதியில் கடந்த ஆகஸ்ட் 26-ல் ஏற்பட்ட பெருவெள்ளம், நேபாளத்தின் போடே கோஷி நதியில் சீறிப்பாய்ந்தது. சகதியுடன் பல அடி உயரத்துக்கு பெருக்கெடுத்த வெள்ளத்தில் கரையோர கிராமங்கள், சிறு நகரங்கள் அடியோடு அழிந்தன. வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள், பாலங்கள், சாலைகள், நீா்மின் நிலையங்கள், இதர உள்கட்டமைப்புகள் அடித்துச் செல்லப்பட்டன.
போடே கோஷி நதி வெள்ளம், திரிசூலி, நாராயணி நதிகளிலும் கலந்து பெரும் சேதத்தை விளைவித்தது. ரசுவா, நுவாகோட், சித்வன், நவல்பராசி கிழக்கு, நவல்பராசி மேற்கு, கோா்கா, தனாஹு ஆகிய மாவட்டங்களை புரட்டிப் போட்ட இந்தப் பெருவெள்ளத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,290-ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், நேபாளத்தில் இந்தப் பெருவெள்ளத்தால் 2.56 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 24,187 கோடி) மதிப்பிலான இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, அந்நாட்டின் அத்தியாவசிய கட்டுமானப் பணிகளான சாலைகள் மற்றும் தற்காலிக முகாம்களை அமைப்பதற்கும், குடிநீர் வழங்குவதற்கும், மின்சாரத்தை மீட்டெடுப்பதற்கும் அடுத்த 4 மாதங்களில் மட்டும் 52.6 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 496 கோடி) செலவாகும் எனவும் தெரிவித்துள்ளது.
Summary
Damage caused by Nepal floods estimated at $2.56 billion
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







