காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சுமேட்டூரிலிருந்து காவிரி நீர் கல்லணை வந்தது! நாளை காலை திறப்பு!நேபாள பெருவெள்ளம்! தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடக்கம்!!தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமான கார்க் தீவில் தொடர் குண்டுவெடிப்புகள்!

கார்க் தீவில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்வதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Kharg island – US President Trump

கார்க் தீவு - அமெரிக்க அதிபர் டிரம்ப். - படம்: ஏஎஃப்பி

Published On :5 செப்டம்பர் 2026, 2:36 pm IST

கார்க் தீவில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்வதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா - ஈரான் இடையே மீண்டும் மோதல் அதிகரித்துள்ள நிலையில் ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமான கார்க் தீவில் தொடர்ந்து குண்டுவீச்சு நடத்தப்படுவதாக ஈரான் ஊடகங்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளது.

இதுதொடர்பாக ஈரானில் உள்ள தனியார் செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட செய்திகளில், கார்க் தீவு அருகே ஏராளமான வெடிச்சத்தங்களை கேட்கப்பட்டதாகவும், தீவின் அருகே ஈரானின் டேங்கர் ஒன்றை அமெரிக்கா தாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதுபற்றி ஈரான் அல்லது அமெரிக்காவிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வத் தகவல்களும் வெளியாகவில்லை.

இரு நாடுகளுக்கிடையே 6 மாத காலம் தொடர்ந்த போர் சில வாரங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஞாயிறு முதல் மீண்டும் மோதல் வெடித்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதால், அதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் நிலைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள அமெரிக்காவின் ராணுவ முகாம்கள் மீது இரு நாள்களுக்கு முன் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானில் ஒரு திருமண நிகழ்வில் குண்டுவீசிய அமெரிக்கப் படையினர், பொதுமக்கள் பலியாகக் காரணமாக இருந்ததற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தத் தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஹோர்முஸ் நீரிணை மீதான கட்டுப்பாடு தொடர்பாக இரு நாடுகளும் போட்டியிட்டு வரும் நிலையில், பல கப்பல்களை ஈரான் நிறுத்தி வைத்துள்ளது. அதேபோல, ஈரான் துறைமுகங்களை அமெரிக்கப் படையினர் முற்றுகையிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Summary

Iranian media have reported a series of explosions on Kharg Island.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.