குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

ஈரானில் எரிபொருள் டேங்கர் லாரி வெடித்துச் சிதறியதில் 11 பேர் பலி

மேற்கு ஈரானில் எரிபொருள் டேங்கர் லாரி வெடித்துச் சிதறிய விபத்து பற்றி....

A fuel tanker explosion in west Iran kills 11 and injures 7

கோப்புப்படம்.

Published On :6 செப்டம்பர் 2026, 12:59 pm IST

மேற்கு ஈரானில் எரிபொருள் டேங்கர் லாரி வெடித்துச் சிதறியதில் 11 பேர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானின் குர்திஷ் நகரமான சனந்தாஜ் அருகே உள்ள போக்குவரத்து காவல் நிலையம் அருகே, டேங்கர் லாரி மற்ற கார்கள் மீது மோதி தீப்பிடித்து எரிந்ததாக ஐ.ஆர்.என்.ஏ ஊடகம் சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

லாரியின் பிரேக் பழுதானதே இந்த விபத்துக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் 11 பேர் பலியாகினர். மேலும் 7 பேர் காயமடைந்தனர் என்று அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டில், சனந்தாஜ் அருகே எரிபொருள் டேங்கர் லாரியும் பயணிகள் பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில் 15 பேர் பலியாகினர்.

ஈரானில் ஆண்டுதோறும் ஏற்படும் சாலை மற்றும் போக்குவரத்து விபத்துகளில் 17,000-க்கும் மேற்பட்டோர் பலியாகின்றனர்.

Summary

A fuel tanker exploded in western Iran, killing 11 people and injuring seven others, state media said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.