அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அரசு பேருந்துகளில் கன்னட இலக்கிய சொற்கோவைகள்

கர்நாடகத்தில் அரசு பேருந்துகளில் கன்னட இலக்கிய சொற்கோவைகளை பொறிக்க அரசு  உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :2 நவம்பர் 2017, 2:06 am

DIN

கர்நாடகத்தில் அரசு பேருந்துகளில் கன்னட இலக்கிய சொற்கோவைகளை பொறிக்க அரசு  உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இயக்கப்பட்டுவரும் அரசு பேருந்துகளில் ஓட்டுநரின் இருக்கை பகுதிக்கு பின்புறம் அல்லது முன்பகுதியில் உள்ள பெயர்ப் பலகையின் பின்புறங்களில் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள்கள் பொறிக்கப்பட்டுள்ளன. திருக்குறளை மக்களிடையே கொண்டு செல்வதற்காக தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கையை போல, கர்நாடகத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் கன்னட இலக்கியங்களின் சொற்கோவைகளைப் பொறிக்க கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எச்.எம்.ரேவண்ணா கூறியது:
கர்நாடக அரசு சாலை போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகள் கன்னட மொழி, இலக்கியம் மற்றும் பண்பாடுகளைப் பிரதிபலிக்கும் தூதர்களாக மாற்றப்படும். கர்நாடக உதய தின விழாவை முன்னிட்டு, கர்நாடகத்தை சேர்ந்த தலைசிறந்த கன்னட கவிஞர்கள், சமூகசீர்த்திருத்தவாதிகள், இலக்கியவாதிகள் எழுதியுள்ள இலக்கியப் படைப்புகளில் இருந்து குறிப்பிட்ட சொற்கோவைகளை அரசு பேருந்துகளில் பொறிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கன்னட மொழியின் முதல்படைப்பான 'கவிராஜமார்கா' இலக்கியத்திலிருந்து  அண்மைக் கால இலக்கியங்களில் காணப்படும் சமுதாயத்திற்கு நன்மையை உண்டாக்கும் சொற்கோவைகளைப் பொறிக்கவிருக்கிறோம். இதன்மூலம் கர்நாடகத்தின் பெருமைகளை எடுத்துரைக்க முற்பட்டுள்ளோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.