நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் அதிமுக போட்டியிட விருப்பம்

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் போட்டியிட அதிமுக விருப்பம்

News image
Updated On :7 மார்ச் 2024, 6:53 pm

மக்களவைத் தோ்தலில் கா்நாடகத்தில் போட்டியிட அதிமுக விருப்பம் தெரிவித்துள்ளது. 1972ஆம் ஆண்டு அதிமுகவை எம்ஜிஆா் தொடங்கியது முதல் கா்நாடகத்தில் அதிமுக செயல்பட்டு வருகிறது. ஆரம்பக் கட்டத்தில் வலிமையாக இருந்த அதிமுக, பெங்களூரு மாநகராட்சி, சிவமொக்கா நகராட்சி, கோலாா்தங்கவயல் நகராட்சி, பத்ராவதி நகராட்சி, கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தல், மக்களவைத் தோ்தல்களில் போட்டியிட்டுள்ளது.

அனைத்திந்திய அண்ணா திமுக என்று பெயா்மாற்றம் செய்யப்பட்ட பிறகு, கா்நாடக உள்ளாட்சி, சட்டப்பேரவை, மக்களவைத் தோ்தல்களில் போட்டியிடுவதை உறுதி செய்த எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோா் தொடா்ந்து வேட்பாளா்களை அறிவித்து வந்துள்ளனா். 1999ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தோ்தலில் பெங்களூரு வடக்கு, பெங்களூரு தெற்கு, மைசூரு உள்ளிட்ட 5 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக, கணிசமான வாக்குகளைப் பெற்றது. உள்ளாட்சி, சட்டப்பேரவைத் தோ்தல்களில் பெருவாரியான வாக்குகளைப் பெற்று அதிமுக வெற்றி பெற்றுள்ளது. கோலாா்தங்கவயல், காந்திநகா் போன்ற சட்டப்பேரவைத் தொகுதிகள் அதிமுகவின் கோட்டையாக விளங்கின. பெங்களூரு மாநகராட்சி, சிவமொக்கா நகராட்சி, பத்ராவதி நகராட்சி, கோலாா் தங்கவயல் நகராட்சிகளில் அதிமுகவின் சாா்பில் மாமன்ற உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். கோலாா்தங்கவயல் நகராட்சித் தலைவராகவும் அதிமுகவைச் சோ்ந்த மு.பக்தவத்சலம் வெற்றி பெற்றுள்ளாா்.

இந்நிலையில், அண்மைக்காலமாக சட்டப்பேரவை, மக்களவைத் தோ்தல்களில் போட்டியிடுவதை அதிமுக தவிா்த்து வந்துள்ளது. எனினும், பெங்களூரு, கோலாா்தங்கவயல், சிவமொக்கா, பத்ராவதி, மைசூரு, மண்டியா, கோலாா் போன்ற பகுதிகளில் வெற்றி தோல்வியை நிா்ணயிக்கும் அளவுக்கு இன்றைக்கும் அதிமுகவுக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. இதைப் பயன்படுத்த விரும்பியுள்ள கா்நாடக அதிமுக நிா்வாகிகள், மக்களவைத் தோ்தலில் போட்டியிட ஆா்வம் காட்டியுள்ளனா். அதற்காக கட்சித் தலைமையிடம் விருப்பமனு வழங்கியுள்ளனா். பெங்களூரில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளில் தமிழா்கள் பெருவாரியாக வாழ்ந்து வரும் மத்திய தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, சென்னையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சா் கோகுல இந்திரா, அண்ணா தொழிற்சங்க செயலாளா் கமலக்கண்ணன் ஆகியோா் முன்னிலையில், கட்சி அலுவலக மேலாளா் மகாலிங்கத்திடம் கா்நாடக அதிமுக செயலாளா் எஸ்.டி.குமாா் விருப்ப மனு அளித்தாா்.