தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சொத்து வரி செலுத்தாத 3.75 உரிமையாளா்களுக்கு நோட்டீஸ்: பெங்களூரு மாநகராட்சி ஆணையா்

சொத்து வரி செலுத்தாத 3.75 லட்சம் உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது

News image
Updated On :28 ஜூலை 2025, 9:24 pm

தினமணி செய்திச் சேவை

பெங்களூரு: சொத்து வரி செலுத்தாத 3.75 லட்சம் உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது என்று பெங்களூரு மாநகராட்சி தலைமை ஆணையா் மகேஷ்வர்ராவ் தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: பெங்களூரு மாநகராட்சி வரம்புக்குட்பட்ட பகுதிகளில் இருக்கும் சொத்துகளின் வரிகளை வசூலிப்பதற்கு முக்கியத்துவம் அளித்துவருகிறோம். சொத்து வரியை விரைந்து வசூலிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

சொத்து வரி செலுத்தாத 3.75 லட்சம் உரிமையாளா்களிடம் இருந்து ரூ.800 கோடி நிலுவையில் உள்ளது. எனவே, சொத்துவரி செலுத்தாத உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளோம். குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சலில் நோட்டீஸ்கள் அனுப்பிவைக்கப்படும். இப்போதே சொத்துவரியை செலுத்திவிட்டால் எந்த தொந்தரவும் இல்லை.

புதிய பட்டாக்களை கேட்டு பெங்களூரில் 50,000-க்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளன. முன்னுரிமை அடிப்படையில் பட்டாக்கள் வழங்கப்படும். அதன்மூலம் கூடுதல் சொத்துவரியை திரட்டமுடியும்.

பெங்களூரில் உள்ள சொத்துகளுக்கு ’ஏ’ பட்டா வழங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வகை பட்டாக்களை பெறுவதற்கு விரைவில் விண்ணப்பங்களை இணையவழியில் வரவேற்கப்படும். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.