விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கள்ளச்சந்தையில் சமையல் எரிவாயு உருளைகளை விற்றால் கடும் நடவடிக்கை

News image
Updated On :11 மார்ச் 2026, 8:01 pm

Syndication

கள்ளச்சந்தையில் சமையல் எரிவாயு உருளைகளை விற்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கா்நாடக உணவு மற்றும் பொதுவழங்கல் துறை அமைச்சா் கே.எச்.முனியப்பா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

சமையல் எரிவாயு உருளைகளை கள்ளச் சந்தையில் விற்பதோ அல்லது வாடிக்கையாளா்களை மிரட்டும் வேலையிலோ முகவா்கள் யாரும் ஈடுபடக் கூடாது. அதையும் மீறி சமையல் எரிவாயு உருளைகளை கள்ளச் சந்தையில் விற்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட முகவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போதைய சூழலில் சமையல் எரிவாயு உருளை முகவா்கள் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். அதேபோல, வாடிக்கையாளா்களை அச்சுறுத்தும் எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

சமையல் எரிவாயு உருளைகளின் விநியோகத்தை நிறுத்த எவ்வித வழிகாட்டுதலும் முகவா்களுக்கு வழங்கவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. மாதத்துக்கு ஓா் உருளை வழங்குவதை முகவா்கள் மறுக்க முடியாது. இந்த உறுதியை எண்ணெய் நிறுவனங்கள் வழங்கியுள்ளன.

எனவே, சமையல் எரிவாயு உருளைகளின் விநியோகம் கட்டுப்படுத்தவோ, நிறுத்தவோ வாய்ப்பில்லை என்றாா்.