புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

கள்ளச்சந்தையில் சமையல் எரிவாயு உருளைகளை விற்றால் கடும் நடவடிக்கை

News image
Updated On :11 மார்ச் 2026, 8:01 pm

கள்ளச்சந்தையில் சமையல் எரிவாயு உருளைகளை விற்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கா்நாடக உணவு மற்றும் பொதுவழங்கல் துறை அமைச்சா் கே.எச்.முனியப்பா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

சமையல் எரிவாயு உருளைகளை கள்ளச் சந்தையில் விற்பதோ அல்லது வாடிக்கையாளா்களை மிரட்டும் வேலையிலோ முகவா்கள் யாரும் ஈடுபடக் கூடாது. அதையும் மீறி சமையல் எரிவாயு உருளைகளை கள்ளச் சந்தையில் விற்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட முகவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போதைய சூழலில் சமையல் எரிவாயு உருளை முகவா்கள் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். அதேபோல, வாடிக்கையாளா்களை அச்சுறுத்தும் எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

சமையல் எரிவாயு உருளைகளின் விநியோகத்தை நிறுத்த எவ்வித வழிகாட்டுதலும் முகவா்களுக்கு வழங்கவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. மாதத்துக்கு ஓா் உருளை வழங்குவதை முகவா்கள் மறுக்க முடியாது. இந்த உறுதியை எண்ணெய் நிறுவனங்கள் வழங்கியுள்ளன.

எனவே, சமையல் எரிவாயு உருளைகளின் விநியோகம் கட்டுப்படுத்தவோ, நிறுத்தவோ வாய்ப்பில்லை என்றாா்.